வர்மா கமிசனின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் வகையில் பெண்கள் மீதான பாலியல் பலாத்காரக் குற்றங்கள் குறித்து புதிய சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. பாதிக்கப்படும் பெண்களின் வயது வரம்பு பதினெட்டிலிருந்து பதினாறாகக் குறைக்கப்படுகிறது. பாலியல் குற்றங்கள் இனிமேல் கற்பழிப்பு என்றே குறிப்பிடப்படும்.
அதேபோல, வர்மா கமிசனின் கருத்துக்களுக்கு எதிரான வகையில், மனைவியின் மீது கணவன் நடத்தும் கட்டாயப் பாலியல் வல்லுறவுக் குற்றமானது பலாத்காரமாகக் கருதப்படமாட்டாது. பாதிக்கப்பட்ட பெண்கள் கோமா நிலைக்குச் சென்று விட்டால் மரணதண்டனை வழங்கப்படும். அமிலம் வீசும் செய்கையும் பாலியல் குற்றமாகக் கருதப்படும்.
பாலியல் குற்றங்களை மறைக்கும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் பெண்களின் வாக்குமூலங்கள் பெண் போலீஸ் அதிகாரிகளால் மட்டுமே வாங்கப்பட வேண்டும். இம்மாற்றங்கள் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதும் சட்டத் திருத்த மசோதாவாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
|