வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட. |
|
|
திருக்குறள் AUDIO |
|
|
|
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition): |
என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்பநோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன். |
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition): |
(இதுவும் அது.) கொண்கன் ஒருநாள் வருக - இத்துணைநாளும் வாராக் கொண்கன் ஒருநாள் என்கண் வருவானாக; பைதல் நோயெல்லாம் கெடப் பருகுவன் - வந்தால் பையுளைச் செய்கின்ற இந்நோயெல்லாம் கெட அவ்வமிழ்தத்தை வாயில்கள் ஐந்தானும் பருகக் கடவேன். ('வருக' என்பதற்கும் 'மன்' என்பதற்கும் மேல் உரைத்தவாறே கொள்க. அக்குறிப்பு 'அவ்வொரு நாளைக்குள்ளே இனி வரக்கடவ நோய்களும் கெடுப்பல்' என்பதாம்.) |
மணக்குடவர் உரை: |
கொண்கன் ஒருநாள் வருவானாக வேண்டும்: வந்தானாகில் என் பசலைநோயெல்லாங் கெடப் பருகுவேன். இது வரவு வேட்கையாற் கூறியது. |
தேவநேயப் பாவாணர் உரை: |
(இதுவுமது) கொண்கன் ஒருநாள் வருக- நீண்டநாளாக வராத என்காதலர் ஒரு நாள் தப்பாது என்னிடம் வருவாராக; பைதல் நோய் எல்லாம் கெடப் பருகுவன்- வந்தால், எனக்குத் துன்பஞ் செய்கின்ற இக்காம நோய் அடியோடு நீங்குமாறு; அவருடம்பாகிய அமிழ்தத்தை என் ஐம்புலனாலும் ஆசைதீரப் பருகி யின்புறுவேன். காதலர் வரின் இன்றுள்ள நோயும் இனிவரும் நோயும் ஒரே வேளையில் முற்றும் நீங்கிவிடும் என்பதாம். 'வருக', 'மன்' என்பவற்றிற்கு மேலுரைத்தவா றுரைக்க. |
கலைஞர் உரை: |
என்னை வாடவிட்டுப் பிரிந்துள்ள காதலன், ஒருநாள் வந்துதான் ஆகவேண்டும். வந்தால் என் துன்பம் முழுவதும் தீர்ந்திட அவனிடம் இன்பம் துய்ப்பேன். |
சாலமன் பாப்பையா உரை: |
என் காதலன் ஒருநாள் என்னிடம் வருவானாக; வந்த பிறகு, என்னுடைய துன்ப நோய் எல்லொம் தீருமாறு நான் நன்றாக நுகர்வேன். |
Translation |
O let my spouse but come again to me one day!
I'll drink that nectar: wasting grief shall flee away. |
Explanation |
May my husband return some day; and then will I enjoy (him) so as to destroy all this agonizing sorrow. |
Transliteration |
Varukaman Konkan Orunaal Parukuvan
Paidhalnoi Ellaam Keta |
|
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம் |
|