|
||||||||
வீரஉரை |
||||||||
ஒரு இடத்தில் ஒரு இந்தியன் , ஒரு ரஷ்யன் , ஒரு அமெரிக்கன் மூவரும் கூடி இறைவனைப் பிரார்த்தித்தார்கள் . கடவுள்தோன்றினார் . ரஷ்யர் , “ ரஷ்யா எப்போது முன்னேறும் ” என்று கேட்டார் . உடனே கடவுள் “ இன்னும் 50 வருடம் ஆகும் ” என்றார் . உடனே ரஷ்யர் “ அதைப் பார்க்க நான் இருக்க மாட்டேனே ” என்று கூறி அழுதார் . அமெரிக்கரும் கடவுளிடம் அதே கேள்விகளைக்கேட்க “80 வருடம் ஆகும் ” என்றார் கடவுள் . “ அவ்வளவு காலம் வாழ்ந்து நான் அதைப் பார்க்க முடியாதே ” என்று அமெரிக்கரும் அழுதார் . இறுதியாக இந்தியர் “ எங்கள் இந்தியா எப்போது முன்னேறும் ?” என்று கேட்டது தான் தாமதம் கடவுள் அழ ஆரம்பித்தார் . ஏன் என்று கேட்டால் “ அதைப் பாாக்க நானே இருக்க மாட்டேனே ” என்றாராம் . ஆனால் பெருந்தலைவர் காமராசர் போன்ற தலைமை கிடைத்தால் இந்தியா உலகிலேயே முதன் முதலில் முன்னேறி இருக்கும் என்று கடவுள் கூறி இருப்பார் . 1973 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி சென்னை கண்ணப்பர் திடலிலும் , சைதாப்பேட்டை தேரடித்திடலிலும் , காங்கிரஸ் கூட்டங்கள் நடந்தன . சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரசார் அதிலும் தமிழக காங்கிரசார் எதற்கும்போராட வேண்டிய அவசியம் நேரவில்லை . காரணம் தமிழகத்தில் பெருந்தலைவர் கட்சிப்பொறுப்பு ஆட்சிப்பொறுப்பையும் திறம்பட நடத்தியதுதான் . ஆட்சிக்கு வந்த தி . மு . க . அரசு மதுவிலக்கை ரத்து செய்தது . காங்கிரசார் இதனை எதிர்த்து போராட்டம் நடத்த முடிவு செய்தனர் . விலைவாசி உயர்வு , விவசாயிகள் பிரச்சினை , மதுவிலக்கை மீண்டும் அமுல்படுத்துதல் , நெசவாளர் பிரச்சினை போன்ற பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ் நாட்டில் போராட்டம் நடத்த காங்கிரசார் முடிவு செய்தார்கள் . காமராசரின் கட்டளைக்காக காத்துக் கிடந்த பல ஆயிரக்கணக்கான காங்கிரஸ் இளைஞர்கள் உற்சாகத்துடன் போராட்டத்தில் குதித்தார்கள் . இந்தச் சூழலில் சைதாப்பேட்டை கண்ணப்பர் திடல் இரண்டு கூட்டங்களில்பேசிய பெருந்தலைவர் , “ நாட்டின் இன்றைய நெருக்கடிகளுக்குப் பொருளாதார அரசியல் சூழ்நிலைதான் காரணம் , வேகமாக திட்டம்போட்டார்களே தவிர வேலை வாய்ப்பு இல்லை , உறைவிட வசதியில்லை ; ஏமாற்றுபவர்கள் அதிகமாகி விட்டதால் பணவெறி பதவி வெறியில் நாடு நிலைகுலைந்து விட்டது . காந்தீய வழியில் போராடுவோம் . இதில் வன்முறை , முறைகேடு இருக்காது . அறப்போராட்டத் தொண்டர்கள் போலீசாரால் எத்தகைய துன்பம் வந்தாலும் பொறுமையோடு தாங்கிக்கொள்ள வேண்டும் . வாய்மையே வெல்லும் என்று கூறினார் . இந்த வீர உரை இளைஞர்களுக்கு எழுச்சியை உண்டாக்கியது . தமிழ் நாட்டில் காங்கிரஸ் தலைவர்கள் , தொண்டர்கள் உட்பட 35000 பேர் கைது செய்யப்பட்டு சிறை வைக்க இயலாததால் மீண்டும் விடுதலை செய்யப்பட்டனர் . |
||||||||
by Swathi on 03 Sep 2015 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|