LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

வீரஉரை

ஒரு இடத்தில் ஒரு இந்தியன் , ஒரு ரஷ்யன் , ஒரு அமெரிக்கன் மூவரும் கூடி இறைவனைப் பிரார்த்தித்தார்கள் . கடவுள்தோன்றினார் .

ரஷ்யர் , “ ரஷ்யா எப்போது முன்னேறும் ” என்று கேட்டார் . உடனே கடவுள் “ இன்னும் 50 வருடம் ஆகும் ” என்றார் . உடனே ரஷ்யர் “ அதைப் பார்க்க நான் இருக்க மாட்டேனே ” என்று கூறி அழுதார் .

அமெரிக்கரும் கடவுளிடம் அதே கேள்விகளைக்கேட்க “80 வருடம் ஆகும் ” என்றார் கடவுள் . “ அவ்வளவு காலம் வாழ்ந்து நான் அதைப் பார்க்க முடியாதே ” என்று அமெரிக்கரும் அழுதார் .

இறுதியாக இந்தியர் “ எங்கள் இந்தியா எப்போது முன்னேறும் ?” என்று கேட்டது தான் தாமதம் கடவுள் அழ ஆரம்பித்தார் . ஏன் என்று கேட்டால் “ அதைப் பாாக்க நானே இருக்க மாட்டேனே ” என்றாராம் .

ஆனால் பெருந்தலைவர் காமராசர் போன்ற தலைமை கிடைத்தால் இந்தியா உலகிலேயே முதன் முதலில் முன்னேறி இருக்கும் என்று கடவுள் கூறி இருப்பார் .

1973 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி சென்னை கண்ணப்பர் திடலிலும் , சைதாப்பேட்டை தேரடித்திடலிலும் , காங்கிரஸ் கூட்டங்கள் நடந்தன . சுதந்திரம் பெற்ற பிறகு காங்கிரசார் அதிலும் தமிழக காங்கிரசார் எதற்கும்போராட வேண்டிய அவசியம் நேரவில்லை . காரணம் தமிழகத்தில் பெருந்தலைவர் கட்சிப்பொறுப்பு ஆட்சிப்பொறுப்பையும் திறம்பட நடத்தியதுதான் .

ஆட்சிக்கு வந்த தி . மு . க . அரசு மதுவிலக்கை ரத்து செய்தது . காங்கிரசார் இதனை எதிர்த்து போராட்டம் நடத்த முடிவு செய்தனர் .

விலைவாசி உயர்வு , விவசாயிகள் பிரச்சினை , மதுவிலக்கை மீண்டும் அமுல்படுத்துதல் , நெசவாளர் பிரச்சினை போன்ற பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு தமிழ் நாட்டில் போராட்டம் நடத்த காங்கிரசார் முடிவு செய்தார்கள் .

காமராசரின் கட்டளைக்காக காத்துக் கிடந்த பல ஆயிரக்கணக்கான காங்கிரஸ் இளைஞர்கள் உற்சாகத்துடன் போராட்டத்தில் குதித்தார்கள் .

இந்தச் சூழலில் சைதாப்பேட்டை கண்ணப்பர் திடல் இரண்டு கூட்டங்களில்பேசிய பெருந்தலைவர் ,

“ நாட்டின் இன்றைய நெருக்கடிகளுக்குப் பொருளாதார அரசியல் சூழ்நிலைதான் காரணம் , வேகமாக திட்டம்போட்டார்களே தவிர வேலை வாய்ப்பு இல்லை , உறைவிட வசதியில்லை ; ஏமாற்றுபவர்கள் அதிகமாகி விட்டதால் பணவெறி பதவி வெறியில் நாடு நிலைகுலைந்து விட்டது . காந்தீய வழியில் போராடுவோம் . இதில் வன்முறை , முறைகேடு இருக்காது . அறப்போராட்டத் தொண்டர்கள் போலீசாரால் எத்தகைய துன்பம் வந்தாலும் பொறுமையோடு தாங்கிக்கொள்ள வேண்டும் . வாய்மையே வெல்லும் என்று கூறினார் .

இந்த வீர உரை இளைஞர்களுக்கு எழுச்சியை உண்டாக்கியது . தமிழ் நாட்டில் காங்கிரஸ் தலைவர்கள் , தொண்டர்கள் உட்பட 35000 பேர் கைது செய்யப்பட்டு சிறை வைக்க இயலாததால் மீண்டும் விடுதலை செய்யப்பட்டனர் .

by Swathi   on 03 Sep 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.