|
|||||
வீரம் - திரைவிமர்சனம் !! |
|||||
இயக்குனர் : சிவா
நடிகர் : அஜித்குமார்
நடிகை : தமன்னா
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
ஒளிப்பதிவு : வெற்றி
ஓட்டச்சரித்திரம் என்னும் ஊரில் படத்தின் கதை ஆரம்பிக்கிறது. தம்பிகள் தான் தனக்கு எல்லாமாக வாழும் அண்ணனாக தல அஜீத். அண்ணன் தான் தங்களுக்கு என்று வாழும் தம்பிகலாக வித்தார்த், பாலா, முனீஷ், சுகைல் சந்தோக் வருகிறார்கள். அஜீத்தும் அவரது சகோதரர்களும், ஊருக்குள் அநியாயம் செய்யும் எல்லோரையும் வெளுத்து வாங்குகிறார்கள். இதனால் போலீஸ் இவர்களை பிடிக்க வர, அவர்களுக்கு முன் ஜாமீன் எடுத்தே வைக்கும் வக்கீலாக வருகிறார் சந்தானம். படம் முழுக்க அஜீத் - சந்தனத்தின் கூட்டணி வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.
பொண்ணு ஒருத்தி வாழ்க்கைக்குள் வந்தா அண்ணன் தம்பிகள் ஒன்னாக இருக்க முடியாது என்பதால் அஜீத் கல்யாணத்தை வெறுக்கிறார். இதனால் தம்பிமார்களும் கல்யாணத்தை வெறுக்கிறார்கள். ஆனால் தம்பிகளுக்கு ஒரு கட்டத்தில் கல்யாண ஆசை எட்டிப்பார்க்க அண்ணன் கல்யாணம் செய்யாமல், நாங்கள் எப்படி கல்யாணம் செய்வது என்ற குழப்பம் உண்டாகிறது. அஜித்தின் நீண்ட நாள் நண்பனான ஓட்டச்சரித்திர ஊரின் கலெக்டரான ரமேஸ் கண்ணாவின் உதவியுடன் அஜித்துக்கு சின்ன வயதில் கோப்பெருந்தேவி என்ற பெண்ணின் மீது அல்ல அந்த பெயரின் மீது ஒரு ஈடுபாடு இருந்தது தெரியவருகின்றது. அப்போதுதான் தம்மன்னாவின் அறிமுகம்.
இடையில் கஜினி பட வில்லன் இந்த படத்தில் முற்பாதி வில்லனாக வருகிறார். இவர்தான் ஊரில் நடக்கும் எல்ல அநியாயங்களுக்கும் சொந்தக்காரார். இவரை அஜீத் எதிர்க்கும் காட்சிகளாக இருக்கட்டும், அஜீத் தம்பிகள் இவரின் ஆட்களுடன் சண்டைப்போடும் காட்சிகளாக இருக்கட்டும் அனல் பறக்கிறது.
தமன்ன படத்தில் சிற்பங்களுக்கு வர்ணம் தீட்டும் பெண்ணாக வருகிறார். இவரை தம்பிகள் தேடிப்பிடித்து ரமேஸ் கண்ணாவின் உதவியுடன் அவர்களின் ஊரில் உள்ள கோவில் சிலைக்கு வர்ணம் தீட்ட அழைத்து சென்று தங்கள் வீட்டுக்கு பக்கத்தில் குடி வைப்பதில் இருந்து படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் ஆரம்பிக்கிறது. அதில் ஒரு கட்டத்தில் தம்மன்னாவின் குழு, ராமன், சீதை, லட்சுமணன் சிலைக்கு வர்ணம் தீட்ட முற்படும் போது, ஒவ்வொரு சிலையையும் தனித்தனியாக பிரித்து வேலை செய்தால் எளிதில் முடிந்து விடும் என ஒருவர் சொல்ல... இல்லை ராமன், சீதை,ராமனின் தம்பி லட்சுமணன் என்று இருக்கும் இதை வர்ணம் தீட்ட கூட பிரித்து வைத்து தீட்ட கூடாது என்று தம்மன்னா சொல்ல அதை கேட்டுக்கொண்டிருந்த அஜித்தின் கல் மனதுக்குள் காதல் மெதுவாக எட்டிப்பார்க்கிறது.
அஜீத், தமன்னா காதல் வளர்ந்து கொண்டிருக்க.. கல்யாணம் செய்வதற்காக தம்மன்னாவின் அப்பாவின் சம்மதம் வாங்க ஊருக்கு செல்கிறார்கள் தமன்னாவும் அஜீத்தும். தமன்னாவின் தந்தையாக வருகிறார் நாசர். படத்தில் இவர் ஒரு அகிம்சைவாதி என்பதால் இவருக்கு அடிதடி என்றாலே பிடிக்காது. இறுதியில் அஜித்தை, நாசர் ஏற்றுக்கொண்டாரா, அஜீத் தனக்கு வந்த பிரச்சனைகளை எப்படி வென்றார் என்பதுதான் படத்தின் மீதி கதை.
படத்தின் முதல்பாதியில் சந்தனத்தின் காமெடியினாலும், பிற்பாதியில் தம்பிராமையாவின் காமெடியினாலும் தியேட்டரே சிறப்பலையில் அதிர்கிறது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் அனைத்தும் ஹிட். பாடல்காட்சிகளும் சூப்பர்.
வீரம் மொத்தத்தில்...... காமெடி + சென்டிமென்ட் + ஆக்சன் |
|||||
Ajith and Santhanam in Veeram | |||||
by Swathi on 10 Jan 2014 4 Comments | |||||
Tags: வீரம் வீரம் விமர்சனம் வீரம் சினிமா விமர்சனம் வீரம் திரைப்பட கதை வீரம் கதை வீரம் அஜீத் Veeram | |||||
கருத்துகள் | ||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|