வீறு எய்திமாண்டார் வினைத்திட்பம்-சூழ்வினையால் மேம்பட்டுப் பிறவிலக்கணங்களாலும் மாட்சிமைப் பட்ட அமைச்சரின் வினைத்திண்மை;வேந்தன் கண் ஊறு எய்தி உள்ளப்படும்-பயனளவில் அரசனையடைதலால் அவனாலும் பிறராலும் மதிப்பொடு கருதப்பெறும். பிறவிலக்கணங்கள் கச-ஆம் அதிகாரத்தில் முதல் ஆறு குறள்களிலுஞ் சொல்லப்பட்டனவாம். 'வேந்தன்க ணூறெய்தல்' - வினைத்திட்பத்தால் விளைந்த செல்வமும் புகழும் அரசனை யடைதல். ஊறெய்தல்-உறுதல். உறுவது ஊறு. உறுதல்-அடைதல்.
கலைஞர் உரை:
செயல் திறனால் சிறப்புற்ற மாண்புடையவரின் வினைத் திட்பமானது, ஆட்சியாளரையும் கவர்ந்து பெரிதும் மதித்துப் போற்றப்படும்.
சாலமன் பாப்பையா உரை:
எண்ணங்களால் சிறந்து, பெருமை மிக்கவர்களின் செயல் உறுதி. அரசு வரை செல்வதால் மற்றவர்களாலும் மதிக்கப்படும்.
Translation
The power in act of men renowned and great,
With king acceptance finds and fame through all the state.
Explanation
The firmness in action of those who have become great by the excellence (of their counsel) will, by attaining its fulfilment in the person of the king, be esteemed (by all).