தேவையானவை : பீட்ரூட்: அரை கிலோ வெங்காயம்: 1 எண்ணெய்: 3 டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு: 1 துருவிய எலுமிச்சம் பழத்தோல்: அரை ஸ்பூன் எலுமிச்சம் பழச்சாறு: 1 டீஸ்பூன் உப்பு, மிளகுத்தூள்: தேவைக்கேற்ப செய்முறை: 1.முதலில் பீட்ரூட், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் தோலைச் சீவி வெட்டிக் கொள்ள வேண்டும். எலுமிச்சம் பழத் தோலை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
2.பின்பி ஒரு குக்கரில் எண்ணெயை சுட வைத்து வெங்காயத்தை வதக்க வேண்டும். பிறகு பீட்ரூட், உருளைக்கிழங்கு , துருவிய எலுமிச்சம் பழத்தோல், தண்ணீர் ஆகியவற்றைச்சேர்த்து 15 நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும்.
3.காய்கறிகள் வெந்தவுடன் அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
4.தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சம் பழச் சாறு சேர்த்து சுமார் 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும். பின்பு சூடாகப் பறிமாறவும் .
|