தேவையானவை :
பாகற்காய் - 1 எலுமிச்சம்பழம் - 1 காய்ச்சிய பால் - 1/2 கப் நெய் -1 டீஸ்பூன் வெங்காயம் - 1 தக்காளி - 1 பச்சை மிளகாய் - 1 சூப் பவுடர் - 1 டீஸ்பூன்
தாளிக்க :
சோம்பு - 1/4 டீஸ்பூன் மிளகு - 1/4 டீஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன் பட்டை - 1 கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது உப்பு - தேவையான அளவு செய்முறை :
1.முதலில்பொடியாக நறுக்கியா பாகற்காய் , மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு வேக வைக்கவும்.
2.பின்பு ஒரு கடாயில் நெய் விட்டு சோம்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளிக்க வேண்டும். பின்பு வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
3.அதில் வெந்த பாகற்காய், சூப் பவுடர் சேர்த்துக் கிளறி, தண்ணீர் சேர்த்து ஒரு விசில் விட்டு இறக்க வேண்டும்.
4.அதனுடன் உப்பு , எலுமிச்சம்பழம் பிழிந்து பால், கொத்துமல்லிசேர்த்து பரிமாற வேண்டும்.
|