|
||||||||||||||||||
வெண்மனப், பாக்கள் 10-13 |
||||||||||||||||||
முயற்சி தன்னம்பிக்கை முன்னேற்றம் கண்ட அயர்ச்சி தவிர்த்த ஆற்றலாகும் -உழைப்பு
நெஞ்சுறுதி அமையும் நெடுநாள் வனப்பு
வஞ்சம் உள்நுழையாத வடிவு
வடிவு கண்டு வருத்தி எள்ளாமை
விடியல் தன்னம்பிக்கை வளமை -வண்ணமிகு
அகத்தின் தளர்வில்லா அழகெனும் விடிவெள்ளி
நகத்தின் நயமாகும் நன்று!
நன்று உரைக்கும் நல்லோர் சொல்
தின்று விழுங்கும் தின்பண்டமென- வாழ்வில்
தள்ளப்படும் கருத்து தளர்வுறும் மனிதம்
எள்ளல் சுவையாம் எனல்!
எனல் எனலென என்னுள் எழுகின்ற
அனல் பறக்கும் அநேகமாகும் -சந்தேகங்களை
இல்லாது ஒழிக்க இயலும் காரியமாற்ற
அல்லும்பகலும் அசரவில்லை அகம்!
... நாகினி
|
||||||||||||||||||
by Bknagini on 25 May 2015 0 Comments | ||||||||||||||||||
Tags: Venmanp Parakkalaye Paakkal பாக்கள் நாகினி | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|