LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மகுடேசுவரன்

வேறென்ன செய்ய ! - கவிஞர் மகுடேசுவரன்

ஊரடங்கும் நேரத்தில்
திரும்புகிறேன்.
நெடுஞ்சாலை விலகி
கிளைச்சாலை நுழையுமிடத்தில்
அவ்வீடு இருக்கிறது.

சாலைத் தார் குடிக்கவென்று
வீட்டுப் படிகள் இறங்கியிருக்கின்றன.
நடுப்படியில் அவள்
தனியாய் அமர்ந்திருக்கிறாள்.

அந்தக் கோலத்தை நான்
எண்ணற்ற முறை கண்டுள்ளேன்
என்றாலும்
இன்று புதிதாய்ப் புரிந்தது.

இருளுக்கும்
உலோப நிலவுக்கும்
சரிபாதியாய்ப் பிரிந்த அரையொளியில்
தன் உடலைத் தளர்த்தியிருக்கிறாள்.

இருவரும்
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிறோம்
எப்போதும்போல.

அவள் பார்வையும்
வீதித்தென்றலும்
என்னைத் தீண்டும் நேரம்
ஒன்றாகவேயிருக்கும் -
இன்றும் அப்படியே.

நான் மேலும் சென்று
தொலைகின்றவன்.
அவள்
தொலைத்ததை மீட்க விழைபவள்.

எப்போதும் செல்பேசியில்
எதையோ தடவியபடி இருப்பாள்.
பேசிக்கொண்டிருந்து
பார்த்ததில்லை.

அவள் செல்பேசியிலிருந்து
‘நேத்துவரை நெஞ்சில் ஆச தோனல...
போனவழி பார்த்து கண்ணு மூடல’
என்ற வரிகள்
காதில் விழுந்தன.
என் சரிவுகளைத்
தாங்கிக்கொண்டு விரைந்தேன்.

அவள்
அந்தத் தனிமையின் அருளை
முழுமையாய்ப் பெறுவாளாக !
வாழ்த்துதலன்றி
வேறென்ன செய்ய !

 

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 20 Dec 2014  0 Comments
Tags: Verenna Seiya   வேறென்ன செய்ய                 
 தொடர்புடையவை-Related Articles
வேறென்ன செய்ய ! - கவிஞர் மகுடேசுவரன் வேறென்ன செய்ய ! - கவிஞர் மகுடேசுவரன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.