* தொழிலும் வருவாயும் உள்ளவர்களே கடமைகளை ஒழுங்காகச் ... செய்யமுடியும். அறவழியில் நடக்கமுடியும். ஆகவே உடல் வலிவுள்ள யாவரும் தொழில் செய்தேயாகவேண்டும்.செலவுக்கேற்ற வருவாய் தேடியே ஆகவேண்டும்.
* முற்றிலும் தனக்குத் தெரியாத ஒரு வாணிபத்தில் இறங்குவது கூடாது. பெரிய அளவில் செல்வ முதல் உடையோர்கள் ஊதியத்தின் மூலம் பலருடைய தொழில் நுட்பத் திறமைகளை ஒன்றுசேர்த்து பயன்பெறலாம். மற்றவர்களுக்கு புதுத் துறை ஏற்றதல்ல.
* முறையாகச் செய்யும் தொழிலானது உடல், உள்ளம், குடும்பம், ஊர், நாடு, உலகு இவற்றிற்கு மேன்மை தரும். வசதியிருந்து பொருள் ஈட்டாமல் உணவு கொண்டு வாழ்பவர்கள் பொருளாதாரச் செழிப்பை அரிக்கும் கிருமி, சமுதாயாத்திற்கு ஒரு நோய்.
--வேதாத்திரி மகரிஷி
|