|
||||||||
வெயிலை விழுங்கும் சிறுக்கி |
||||||||
நிறைமதியம் கூட இவளுக்கு விலக்கில்லை
கள்ளச் சிறுக்கி
கூந்தலுக்கு எண்ணெய்வைத்து மாதக்கணக்கிருக்கும்.
முள்முருக்கம் மிலாற்றைப்போல் மயிர்கள்.
கோரிக் கட்டி உச்சியிலே கொண்டை
இருந்தாலும் கைக்குள் அடங்காது பன்கூடை
போல கிளம்பியும் இந்தக் காப்பிலிச் சாதிக்கு
சூடில்லை, சுணையில்லை, மின்னிச் சுரை சுழன்று இருந்தாலும்
இறுக்க நேரமில்லை, நாள்முழுக்க கடப்புக்குள்
நின்று கிறுக்கத்தான் பொடிச்சிக்குப் பகல் காணும்.
சும்மா மூக்கோடித் திரிந்த பெட்டை
நான் பள்ளிக்குப் போகும் காலத்தில் இவள் தொடையில்
ஒரு கிள்ளுப் போட்டுவிட்டுப் போவேன்.
அரையில் ஒரு தழும்பு இவளுக்கு உண்டு.
கீரைப் பாம்பு விளைந்த வயிற்றோடு தெரிவாள்.
இன்னும் நான் கலியாணம் செய்யாத கட்டை
இவளைப் பார்!
பெண்பிள்ளை வளர்த்தி யாழ்ப்பாண முருங்கைக்கு ஒத்ததுதான்.
என்னைக் கண்டாலும் இவளுக்கோர் சிலிர்ப்பு.
பேய்ப் பெட்டை
ஆளறிந்து கொள்ளாத முன்சூத்தைப் பல்லீ.
முகம் கொஞ்சம் வௌிப்புத்தான்.
இடித்த மாவைப் போல இல்லாமல்
சந்தனத்தை உரைத்த நிறம்
உதட்டில் எவன் கடித்தான் ஒரு வெடிப்பு?
இவளுக்கு மூத்தவள்
அவளுக்கும் மூத்தவள்
ஒருத்தியுமே இவள்போல இல்லை.
கடப்புக்குள் இவள் நின்று எடுக்கின்ற நளினம்
எவன் மனதைச் சுண்டா?
கூசாமல் பார்ப்பாள்.
நாம் குனிந்து போனால்
இன்னும் ஓருபடிக்கு ஏற இறங்க
நோக்கி விடுப்பெடுப்பாள்.
பெட்டை உண்டான காலம்தான் சோற்றுக்கும் பஞ்சம்.
'வாப்பா'
அவருமொரு வாப்பா;
தொந்தி வயிறன் வீட்டுக்குள் கிடப்பான்
மகள் நின்று தெருவில் எடுக்கின்றாள் நெருப்பு.
நிறைமதியம் கூட இவளுக்கு விலக்கில்லை கள்ளச் சிறுக்கி கூந்தலுக்கு எண்ணெய்வைத்து மாதக்கணக்கிருக்கும். முள்முருக்கம் மிலாற்றைப்போல் மயிர்கள். கோரிக் கட்டி உச்சியிலே கொண்டை இருந்தாலும் கைக்குள் அடங்காது பன்கூடை போல கிளம்பியும் இந்தக் காப்பிலிச் சாதிக்கு சூடில்லை, சுணையில்லை, மின்னிச் சுரை சுழன்று இருந்தாலும் இறுக்க நேரமில்லை, நாள்முழுக்க கடப்புக்குள் நின்று கிறுக்கத்தான் பொடிச்சிக்குப் பகல் காணும்.
சும்மா மூக்கோடித் திரிந்த பெட்டை நான் பள்ளிக்குப் போகும் காலத்தில் இவள் தொடையில் ஒரு கிள்ளுப் போட்டுவிட்டுப் போவேன். அரையில் ஒரு தழும்பு இவளுக்கு உண்டு. கீரைப் பாம்பு விளைந்த வயிற்றோடு தெரிவாள்.
இன்னும் நான் கலியாணம் செய்யாத கட்டை இவளைப் பார்! பெண்பிள்ளை வளர்த்தி யாழ்ப்பாண முருங்கைக்கு ஒத்ததுதான். என்னைக் கண்டாலும் இவளுக்கோர் சிலிர்ப்பு. பேய்ப் பெட்டை ஆளறிந்து கொள்ளாத முன்சூத்தைப் பல்லீ.
முகம் கொஞ்சம் வௌிப்புத்தான். இடித்த மாவைப் போல இல்லாமல் சந்தனத்தை உரைத்த நிறம் உதட்டில் எவன் கடித்தான் ஒரு வெடிப்பு?
இவளுக்கு மூத்தவள் அவளுக்கும் மூத்தவள் ஒருத்தியுமே இவள்போல இல்லை. கடப்புக்குள் இவள் நின்று எடுக்கின்ற நளினம் எவன் மனதைச் சுண்டா?
கூசாமல் பார்ப்பாள். நாம் குனிந்து போனால் இன்னும் ஓருபடிக்கு ஏற இறங்க நோக்கி விடுப்பெடுப்பாள். பெட்டை உண்டான காலம்தான் சோற்றுக்கும் பஞ்சம்.
'வாப்பா' அவருமொரு வாப்பா; தொந்தி வயிறன் வீட்டுக்குள் கிடப்பான் மகள் நின்று தெருவில் எடுக்கின்றாள் நெருப்பு.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|