ஈராக் துணை அதிபராக இருந்தவர் தரீக் அல்-ஹஸ்மி. இவர் அல்கொய்தா தீவிரவாதிகள் உதவியுடன் 150 பேரை கொன்று குவித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. ஆகையால் இவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 6 மாதத்துக்கு முன்பு இவர் ஈராக்கில் இருந்து தனது குடும்பத்துடன் தப்பி கத்தார் நாட்டுக்கு சென்றார். அங்கிருந்து துருக்கி சென்று தஞ்சம் அடைந்தார். அவர் மீது பாக்தாத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது. இந்த தண்டனையை ஹஸ்மி ஏற்க மறுத்துவிட்டார். என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் வழக்கு விசாரணை உண்மையாகவும், நேர்மையாகவும் நடைபெறவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
|