|
||||||||
விடை பெறுதல் - சேயோன் யாழ்வேந்தன் |
||||||||
ஒரு தொட்டிக்குள்
தன் வேர்களைச் சுருக்கிக் கொண்ட
ரோஜாச் செடி
ஒற்றை மலர்ச் சிரிப்புடன்
முன்னிருக்கையில் உட்கார்ந்து கொண்டது
மண்ணில் ஊடுருவி
வேரூன்றிவிட்ட
இன்னொரு செடி
கொஞ்சம் வாடிய நிலையில்
வண்டியில் ஒதுங்கியிருந்தது.
அந்த மண் மார் பிளந்து கிடந்தது
துணிக்கொடியை
அவிழ்க்க முடியாத அவசரத்தில்
அறுத்தபோது
தொப்புள் கொடியை
அறுப்பது போல் துடித்தாள்
அவனின் கையசைத்தல்
போக வேண்டாம் என்றது
அவளின் கையசைத்தல்
மறந்துவிட வேண்டாம் என்றது
அவள் அம்மாவின் கையசைத்தல்
வந்துவிடாதே என்றது.
வண்டிக்குள் பின்புறத்தில் நின்ற
நாய்க்குட்டியின் வாலாட்டல்
என்ன சொல்ல விரும்பியிருக்கும்? |
||||||||
by Swathi on 06 May 2018 0 Comments | ||||||||
Tags: சேயோன் யாழ்வேந்தன் விடை பெறுதல் Vidai Peruthal Seyon Yazhvaendhan | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|