LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- சேயோன் யாழ்வேந்தன்

விடை பெறுதல் - சேயோன் யாழ்வேந்தன்

ஒரு தொட்டிக்குள்

 

தன் வேர்களைச் சுருக்கிக் கொண்ட

 

ரோஜாச் செடி

 

ஒற்றை மலர்ச் சிரிப்புடன்

 

முன்னிருக்கையில் உட்கார்ந்து கொண்டது

 

மண்ணில் ஊடுருவி

 

வேரூன்றிவிட்ட

 

இன்னொரு செடி

 

கொஞ்சம் வாடிய நிலையில்

 

வண்டியில் ஒதுங்கியிருந்தது.

 

அந்த மண் மார் பிளந்து கிடந்தது

 

 

 

துணிக்கொடியை

 

அவிழ்க்க முடியாத அவசரத்தில்

 

அறுத்தபோது

 

தொப்புள் கொடியை

 

அறுப்பது போல் துடித்தாள்

 

 

 

அவனின் கையசைத்தல்

 

போக வேண்டாம் என்றது

 

அவளின் கையசைத்தல்

 

மறந்துவிட வேண்டாம் என்றது

 

அவள் அம்மாவின் கையசைத்தல்

 

வந்துவிடாதே என்றது.

 

வண்டிக்குள் பின்புறத்தில் நின்ற

 

நாய்க்குட்டியின் வாலாட்டல்

 

என்ன சொல்ல விரும்பியிருக்கும்?

by Swathi   on 06 May 2018  0 Comments
Tags: சேயோன் யாழ்வேந்தன்   விடை பெறுதல்   Vidai Peruthal   Seyon Yazhvaendhan           
 தொடர்புடையவை-Related Articles
விடை பெறுதல் - சேயோன் யாழ்வேந்தன் விடை பெறுதல் - சேயோன் யாழ்வேந்தன்
குழந்தையும் தெய்வமும் - சேயோன் யாழ்வேந்தன் குழந்தையும் தெய்வமும் - சேயோன் யாழ்வேந்தன்
தற்கொலைக்குப் பறக்கும் கொசுக்கள் - சேயோன் யாழ்வேந்தன் தற்கொலைக்குப் பறக்கும் கொசுக்கள் - சேயோன் யாழ்வேந்தன்
மாறி நுழைந்த அறை - சேயோன் யாழ்வேந்தன் மாறி நுழைந்த அறை - சேயோன் யாழ்வேந்தன்
இறுதி விண்ணப்பம் - சேயோன் யாழ்வேந்தன் இறுதி விண்ணப்பம் - சேயோன் யாழ்வேந்தன்
கடவுளை நம்பு -  சேயோன் யாழ்வேந்தன் கடவுளை நம்பு - சேயோன் யாழ்வேந்தன்
மழை நோக்கு - சேயோன் யாழ்வேந்தன் மழை நோக்கு - சேயோன் யாழ்வேந்தன்
மழலைகளுக்கான மழை - சேயோன் யாழ்வேந்தன் மழலைகளுக்கான மழை - சேயோன் யாழ்வேந்தன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.