கத்தி படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சிம்புதேவன் இயக்கும் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீ தேவி, சுதீப் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு முதலில் ‘மாரீசன்’, ‘கருடா’, ‘போர்வாள்’, ‘மருதீரன்’ ஆகிய பெயர்கள் பரிசீலனையில் இருந்து வந்தது.
இந்நிலையில் படத்திற்கு புலி எனப் பெயர் வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சரித்திர பின்னணியில் உருவாகும் இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார். சிபுதமீன்ஸ் மற்றும் பி.டி.செல்வகுமார் இருவரும் இணைந்து இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகின்றனர்.
|