சமீபத்தில் விஷால் திருட்டு விசிடிக்கு எதிராக களமிறங்கி தமிழகத்தில் உள்ள சில கடைகளில் திருட்டு விசிடிகளை கைப்பற்றி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.
விஷாலுக்கு திரையுலகில் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், தற்போது நடிகர் விஜய்யும் தன் பங்குக்கு விஷாலைப் பாராட்டியுள்ளார்.
இது குறித்து நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில், பெருமையாக உள்ளது விஷால். பேசிக் கொண்டிருப்பதைவிட, செயலில் காட்டுவதுதான் சிறந்தது என நிரூபித்துவிட்டீர்கள். திருட்டு விசிடியை ஒழிப்போம்," என அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார் விஷால்.
திருட்டு விசிடியை ஒழிப்பதில் போலீஸை மட்டும் நம்பிக்கொண்டிருப்பதில் பிரயோசனமில்லை என்று உணர்ந்து முதலில் களமிறங்கியவர் இயக்குநர் நடிகர் பார்த்திபன். தன் படத்தோடு வெளியான மற்ற படங்களின் திருட்டு விசிடியையும் பிடித்துக் கொடுத்து பரபரப்பு கிளப்பினார். குடைக்குள் மழை சமயத்திலிருந்தே இதனைச் செய்து வருகிறார் அவர். சமீபத்தில் அவரது கதை திரைக்கதை வசனம் இயக்கம் பட வெளியீட்டின் போது, பர்மா பஜார், அண்ணா நகர் உள்பட பல இடங்களில் தானே நேரடி ஆக்ஷனில் இறங்கிய பார்த்திபன் திருட்டு விசிடி விற்பவர்களைப் பிடித்துக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
|