சிம்புதேவன் இயக்கத்தில் புலி படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், அட்லீ இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.
இந்த படத்தின் கதை, பல ஆண்டுகளுக்கு முன்பு விஜய்காந்த் நடிப்பில் வெளியான சத்ரியன் படத்தின் கதையை ஒத்து இருப்பதாக கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபடுகிறது. அதற்கேற்றாற்போல் படத்தில் விஜய், காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகின.
இந்தப்படத்துக்கு மூன்று முகம் என்று பெயர் வைக்கவிருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால், இப்போது அதிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள். இப்போது படத்துக்கு காக்கி என்று பெயர் வைக்கலாம் என்று முடிவுசெய்திருக்கிறார்களாம்.
காக்கி என்ற பெயரில் ஏற்கனவே சரத்குமார் நடிப்பில் ஒருபடம் உருவாகி பாதியில் நின்றது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்தப்பெயரை வைக்கலாமா? வேண்டாமா? என்கிற விவாதமும் படபிடிப்பின் இடையே நடந்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
|