கத்தி படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் புலி. இந்த படத்தை சிம்புதேவன் இயக்க, விஜய்யுடன் சேர்ந்து, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீ தேவி, சுதீப் ஆகியோர் நடித்துள்ளனர்.
புலி படத்தின் படபிடிப்புகள் அனைத்து முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் புலி படத்தின் கதை தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதாவது புலி படம் தொடக்கத்தில் நிகழ்கால கதையில்தான் செல்கிறதாம். ஆனால் ஒரு கட்டத்தில் டைம்மிஷின் மூலம் 500 வருடங்களுக்கு பின்னோக்கி சென்று விடுவாராம் விஜய், காரணம் ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டிருக்கும் மகாராணியான ஸ்ரீ தேவிக்கு, அந்நாட்டு தளபதி சுதீப் பெரிய தொல்லை கொடுத்து வருவாராம்.
அதனால் அவனிடமிருந்து மகாராணியையும், நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஒரு வீரனை தேடுவார்களாம். அப்போதுதான் 500 வருடத்துக்கு முன்னோக்கி வந்து, வீரனாக இருந்து கொண்டிருக்கும் விஜய்யை 500 வருடங்களுக்கு பின்னாடி கொண்டு சென்று விடுவார்களாம்.
ஆனால் அப்படி செல்லும் விஜய் அந்த காலகட்டத்துக்கு செல்லும்போது குள்ள அப்பு போன்று சித்ர குள்ளனாகி விடுவாராம். அதன்பிறகு என்ன நடிக்கிறது என்பதைத்தான் நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கிறாராம் சிம்பு. ஆனால் இந்த கெட்டப்பில் விஜய்யை பார்க்கையில் அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமல் நடித்த அப்பு கெட்டப்போலவே இருக்குமாம்.
ஆனபோதும் இன்றைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்த கதாபாத்திரத்தை இன்னும் சிறப்பாக காட்டியிருக்கிறார்களாம்.
|