பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய அருண்குமார், அடுத்ததாக ஒரு புதிய படத்தை துவங்க இருக்கிறார்.
இந்த படத்திலும் நாயகனாக விஜய் சேதுபதி நடிக்கிறாராம். படத்தின் நாயகி உட்பட பல கதாபாத்திரங்களின் தேர்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறதாம்.
போலீஸ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து உருவாக இருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி போலீசாக நடிக்கிறாராம். ஏற்கனவே இவர்களின் கூட்டணியில் உருவான பண்ணையாரும் பத்மினியும் திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. சர்வதேச திரைப்பட விழாக்களில் 'பண்ணையாரும் பத்மினியும் ' படம் திரையிடப்பட்டு, விருதுகளும் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
|