சிம்பு நடித்த வாலு திரைப்படம் நீண்ட நாட்களாகவே பல முறை வெளியீட்டுத் தேதிகள் அறிவிக்கப்பட்டு. கடைசிநேரத்தில் ஏதாவதொரு பிரச்சனை காரணமாக வெளியீடு தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. இந்தச் செய்திகளை அண்மையில் கேட்டறிந்த நடிகர் விஜய், படத்துக்கு என்ன சிக்கல்? என்று சம்பந்தப்பட்டவர்களைக் கேட்டறிந்திருக்கிறார்.
அதற்கு சம்பந்தப்பட்டவர்கள், இந்தப்படம் வெளியாகவேண்டுமென்றால் ஒரு பெரியதொகையை கொடுத்தாகவேண்டும் என சொல்லி இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. அதைக் கேட்டவுடனே அவ்வளவு தொகையையும் தாமே தருவதாக ஒப்புக்கொண்டாராம் விஜய். பலமுறை இந்தப்படம் தள்ளிப்போனதில் எனக்கு வருத்தம். எனவே படம் வெளியாக என்னாலான இந்த உதவியைச் செய்கிறேன் இதை எப்போது முடியுமோ அப்போது திருப்பிக்கொடுத்தால் போதும் என்று சொல்லி அந்தப்பணத்தைக் கொடுத்ததாகச் சொல்லப்படுகிறது. அதோடு தமக்கு வேண்டிய விநியோகஸ்தர்களிடம் இந்தப்படம் வெளியாக உதவி செய்யுமாறும் கேட்டுக்கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
இவ்வளவையும் செய்துவிட்டு நான் இதைச் செய்கிறேன் என்பதை யாருக்கும் தெரியாமல் பார்த்தக்கொள்ளுங்கள் என்றும் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.
|