இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தேமுதிக அறிவித்துள்ளது.
சென்னையில் நேற்று நடைபெற்ற தேமுதிக கட்சியின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், சட்டப்பேரவையில் இருந்து தேமுதிக கட்சி உறுப்பினர்கள் ஆறு பேர் நீக்கம் செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் இலங்கை தமிழர் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் மீது குற்றம் சாட்டிய அவர், இலங்கை தமிழருக்காக வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளார். மேலும் மற்ற கட்சிகளும் நாடாளமன்ற தேர்தலை புறக்கணிக்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
|