ஆனேகுட்டே விநாயகர் 12 அடி உயரம் உடையவர். ஒரே கல்லில் உள்ளார். தமிழக விநாயகர் அமைப்பில் இல்லாமல், யானை போல் சிலையமைப்பு உள்ளது. இதை சுயம்பு விநாயகர் என்றும் சொல்கின்றனர். திருநீறுக்கு பதிலாக நெற்றியில் நாமம் அணியப்பட்டுள்ளது. மூலவர் அபிஷேகத்துக்கு, கோயில் அருகிலுள்ள மலை உச்சியிலுள்ள மகாலிங்கேஸ்வரர் கோயிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்படுகிறது.
பிரார்த்தனை நிறைவேறினால், பக்தர்கள் விரும்பும் நாளில் 400 கிலோ அரிசி, 1008 அல்லது 125 தேங்காய்களால் விநாயகருக்கு அலங்காரம் செய்யயப்படுகிறது. இதனை மூடுகணபதி பூஜை, அரிசி கணபதி பூஜை என்கின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், புத்திரபாக்கியம், வியாபாரத்தில் லாபம் கிடைக்க கண ஹோமம் நடத்தப்படுகிறது.
பறவைகளின் ஒலி கேட்டு தான், அதிகாலையில் நாம் எழுவோம். அந்தப் பறவைகளையே அதிகாலையில் எழுப்பவும், பறவைகள் மற்றும் கால்நடைகளுக்கு நோய் நொடி ஏற்படாமல் இருக்கவும் கார்த்திகை மாதத்தில், பட்சி சங்கர பூஜை என்னும் விசேஷ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. |