ஏழுஸ்வரங்கள் இந்த விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு தங்களது சாபம் நீங்கப்பெற்றிருப்பது சிறப்பு.இந்த விநாயகர் சன்னதியில் இசைக்
கலைஞர்கள் பாடினால் குரல் வளம் பெறும். அவர்களுக்கு உள்ள பிரச்சினைகள் நீங்கும்; செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை. மேலும்,
மந்தபுத்தி உள்ள குழந்தைகளும், மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளும் சப்தபுரீஸ்வரர் ஆலயத்தில் அமர்ந்து, இந்த விநாயகரை வழிபட்டு
அபிஷேகத் தீர்த்தத்தைப் பருகினால் நாளடைவில் குணம் பெற்று மனநலமும், உடல்வளமும் பெறுவதாகக் கூறுகிறார்கள். மாணவ- மாணவிகள் அதிக
மதிப்பெண்கள் பெறுவதற்காக இந்த விநாயகரை வழிபட்டுப் பயன் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. ஏழைப் பிள்ளையார் என்று போற்றப்படும் இந்த
விநாயகர் தெற்கு திசை நோக்கி அருள்புரிவதால், இவரை வழிபடும் வயதானவர்களுக்கு எமபயமோ, எமவாதனையோ இல்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும், இவர் திருச்சிராப்பள்ளி மலையில் எழுந்தருளியிருக்கும் தந்தையையும் அன்னையையும் பார்த்த வண்ணமிருப்பதால், குடும்பத்தில்
ஒற்றுமையும் அமைதியும் என்றும் நிலைத்திருக்க அருள்புரிகிறார். இந்த விநாயகரைத் தரிசித்தால் மலை ஏறி உச்சிப் பிள்ளையாரைத் தரிசித்த பலன்
கிட்டும்.
ஏழுஸ்வரங்கள் இந்த விநாயகரை பிரதிஷ்டை செய்து வழிபட்டு தங்களது சாபம் நீங்கப்பெற்றிருப்பது சிறப்பு. இந்த விநாயகர் சன்னதியில் இசைக் கலைஞர்கள் பாடினால் குரல் வளம் பெறும். அவர்களுக்கு உள்ள பிரச்சினைகள் நீங்கும்; செல்வச் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை. மேலும், மந்தபுத்தி உள்ள குழந்தைகளும், மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளும் சப்தபுரீஸ்வரர் ஆலயத்தில் அமர்ந்து, இந்த விநாயகரை வழிபட்டு அபிஷேகத் தீர்த்தத்தைப் பருகினால் நாளடைவில் குணம் பெற்று மனநலமும், உடல்வளமும் பெறுவதாகக் கூறுகிறார்கள்.
மாணவ மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்காக இந்த விநாயகரை வழிபட்டுப் பயன் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. ஏழைப் பிள்ளையார் என்று போற்றப்படும் இந்த விநாயகர் தெற்கு திசை நோக்கி அருள்புரிவதால், இவரை வழிபடும் வயதானவர்களுக்கு எமபயமோ, எமவாதனையோ இல்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், இவர் திருச்சிராப்பள்ளி மலையில் எழுந்தருளியிருக்கும் தந்தையையும் அன்னையையும் பார்த்த வண்ணமிருப்பதால், குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் என்றும் நிலைத்திருக்க அருள்புரிகிறார். |