சக்தியின் அம்சமான விநாயகர் இங்கு சிவனின் ஆவுடை மீது வலது கையில் ஒடிந்த தந்தத்துடனும் இடது கையில் கொழுக்கட்டையுடனும் ஈசனின் திசையான ஈசான்யத்தை நோக்கி அருள்பாலிக்கிறார். நவக்கிரகங்கள் அனைத்தும் தத்தம் தேவியருடன் தம்பதி சமேதராக அருள்பாலிக்கிறார்கள். கருவறையில் விமானங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கோயிலின் முன்புறம் சுவாமி, அம்மன், பிள்ளையார்,நாரதர், சுப்ரமணியர், மற்றும் ரிஷபத்துடன் கூடிய கைலாய காட்சி காண்பவரை மெய் சிலிர்க்க வைக்கும். கோயிலின் கீழ்தளத்தில் யாகசாலையும், தியானமண்டபமும் அமைந்துள்ளது. மேல்தளத்திற்கு செல்ல இருபுறமும் படிக்கட்டுகள் அமைந்துள்ளது.
பிள்ளையாரின் தரிசனத்தால் நம் வாழ்க்கையின் தரம் படிப்படியாக ஏறுவது போல், படிகளின் மீது ஏறி பார்த்தால் அங்கு முழுமுதற்கடவுள் நமக்கு அருள்பாலிக்க தயாராக இருப்பது போல் வீற்றிருக்கிறார். இவருக்கு இருபுறமும் கற்பக விநாயகரும், மாணிக்க விநாயகரும் உள்ளனர். சித்தி விநாயகருக்கு எதிரில் அவரது வாகனமும் பலி பீடமும் அமைந்துள்ளது. |