|
||||||||
விரைவு நடை |
||||||||
விரைவொடு நடக்கும் மும்மையும் நான்மையும்
ஓரோவழி வருதல் உண்டென மொழிப
கருத்து : தாள நடைகளாகிய மும்மை, நான்மை, ஐம்மை, எழுமை ஆகிய இவற்றுள் மும்மை நடையும், நான்மை நடையும் சிந்துப் பாடல்களில் சிலவிடங்களில் விரைவு நடையில் வருதலுண்டு என்று சொல்வார்கள்.
விளக்கம் : முன்பு சொல்லப்பட்ட நான்கு வகைத் தாளநடைகளோடு சிறுபான்மை விரைவு நடைகளும் வரும். மும்மை நடையிலும், நான்மை நடையிலும் அவை இயல்பாக நடப்பதிலும் இருமடங்கு விரைவாக நடப்பதுண்டு. அப்போது தாளத்தின் ஒவ்வோர் இடைவெளியிலும் இருமடங்கு அசைகள் நிற்கும்.
காட்டு : ஆதிதாளம் விரைவு மும்மை நடை
வா . னரங்கள் . கனிகொடுத்து . மந்தியொடு . கொஞ் . சும் . . .
மந் . திசிந்து . கனிகளுக்கு . வான் . கவிகள் . கொஞ் . சும் . . .
(திருக்குற். குற. 54)
இதுவொர் அடி. இதில் எட்டு சீர்கள் உள்ளன. ஒவ்வொரு சீரிலும் ஆறு அசைகள் உள்ளன. மூன்று அசை இருந்தால் ‘தகிட’ என்ற மும்மை நடை நடக்கும். இது ‘தகிட தகிட’ என்று நடக்கும் மும்மையைப் போல் இருமடங்கு விரைவாக நடப்பதால் இது விரைவு மும்மை எனப்படும். இதனை மும்மை நடையிலும் பாடலாம். அப்படிப் பாடினால் பாட்டு மெல்ல நடக்கும். குறத்தி மலைவளம் கூறி ஆடும் இப்படிச் ச ¢ல பாடலகள் விரைவு மும்மையில் நடக்கும்.
நான்மையும் இப்படி விரைவு விரைவு நடை நடப்பதுண்டு. அது ‘தகதிமி தகதிமி’ என்று நடக்கும். அது அரிதாக வரும். ‘கண்ணாயிரம்’ என்ற அண்ணாமலைச் ரெட்டியார் காவடிச் சிந்தில் காண்க. (பாடலைப் பின் இணைப்பில் பார்க்க).
கன வயி ர . ப் படை அவன்மக ளை.ப் புணர் - என்றும்
கழு கும லை . ப் பதி யனு தின மு.ற் றிடு - என்றும்
வரும் சீர்களில் இந்த விரைவு நான்மை ஒலியைக் கேட்கலாம்.
விரைவு நடையை ‘இரட்டித்து ஏகல்’ என்பதும் ‘வாரநிலம் வளர்த்தல்” என்பதும் பண்டைய மரபு.
விரைவொடு நடக்கும் மும்மையும் நான்மையும் ஓரோவழி வருதல் உண்டென மொழிப கருத்து : தாள நடைகளாகிய மும்மை, நான்மை, ஐம்மை, எழுமை ஆகிய இவற்றுள் மும்மை நடையும், நான்மை நடையும் சிந்துப் பாடல்களில் சிலவிடங்களில் விரைவு நடையில் வருதலுண்டு என்று சொல்வார்கள்.
விளக்கம் : முன்பு சொல்லப்பட்ட நான்கு வகைத் தாளநடைகளோடு சிறுபான்மை விரைவு நடைகளும் வரும். மும்மை நடையிலும், நான்மை நடையிலும் அவை இயல்பாக நடப்பதிலும் இருமடங்கு விரைவாக நடப்பதுண்டு. அப்போது தாளத்தின் ஒவ்வோர் இடைவெளியிலும் இருமடங்கு அசைகள் நிற்கும்.
காட்டு : ஆதிதாளம் விரைவு மும்மை நடை வா . னரங்கள் . கனிகொடுத்து . மந்தியொடு . கொஞ் . சும் . . . மந் . திசிந்து . கனிகளுக்கு . வான் . கவிகள் . கொஞ் . சும் . . . (திருக்குற். குற. 54) இதுவொர் அடி. இதில் எட்டு சீர்கள் உள்ளன. ஒவ்வொரு சீரிலும் ஆறு அசைகள் உள்ளன. மூன்று அசை இருந்தால் ‘தகிட’ என்ற மும்மை நடை நடக்கும். இது ‘தகிட தகிட’ என்று நடக்கும் மும்மையைப் போல் இருமடங்கு விரைவாக நடப்பதால் இது விரைவு மும்மை எனப்படும். இதனை மும்மை நடையிலும் பாடலாம். அப்படிப் பாடினால் பாட்டு மெல்ல நடக்கும். குறத்தி மலைவளம் கூறி ஆடும் இப்படிச் ச ¢ல பாடலகள் விரைவு மும்மையில் நடக்கும்.
நான்மையும் இப்படி விரைவு விரைவு நடை நடப்பதுண்டு. அது ‘தகதிமி தகதிமி’ என்று நடக்கும். அது அரிதாக வரும். ‘கண்ணாயிரம்’ என்ற அண்ணாமலைச் ரெட்டியார் காவடிச் சிந்தில் காண்க. (பாடலைப் பின் இணைப்பில் பார்க்க). கன வயி ர . ப் படை அவன்மக ளை.ப் புணர் - என்றும் கழு கும லை . ப் பதி யனு தின மு.ற் றிடு - என்றும் வரும் சீர்களில் இந்த விரைவு நான்மை ஒலியைக் கேட்கலாம்.
விரைவு நடையை ‘இரட்டித்து ஏகல்’ என்பதும் ‘வாரநிலம் வளர்த்தல்” என்பதும் பண்டைய மரபு.
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|