|
||||||||
விருமாண்டி கதை பாடல் |
||||||||
கமலஹாசனின் இயக்கத்தில் வந்த படம் விருமாண்டி. கதையின் தளம் மரணதண்டனையை ரத்துசெய்வதை மையமாக கொண்டிருந்தாலும், விருமாண்டி என்ற கிராம தெய்வத்தினை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்த்தது. சண்டியர் என்று பெயர் சர்ச்சையில் விருமாண்டி பெரிய விளம்பரத்தை தேடிக்கொண்டாலும், தெய்வத்தின் பெயரை தாங்கியே இறுதியாக வெளிவந்தது. “இதுக்கெல்லாம் அந்த சாமிதாலே காரணம். அது பேர வைச்சுக்கிட்டுதான் படத்தை வெளிவிடனும்முன்னு இப்படி பண்ணுது” என்று சொல்லி சிரித்தார்கள் நண்பர்கள். அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அவர்கள் தலையிட்டு பிரட்சனையை தீர்த்ததாக சொன்னார்கள்.
விருமாண்டி பாடல் :
கருமாத்தூர் காட்டுக்குள்ளே ஒரு காலத்தில் காளியம்மன் போல வந்தாள் பேச்சியம்மா (கருமாத்தூர்)
சைவசமையல் படையல் வைச்சு சர்வசட்டியில் பொங்கல் வைப்பா சாமிக்கெல்லாம் பூச வைப்பா சங்கெடுத்து ஊதி நிப்பா (கருமாத்தூர்)
சங்குசத்தம் அந்தபொற்குலத்தில் உள்ள பேய்க்காமன் காதில் கேட்டது… கேட்டது… கேட்டது… பொங்கலோடு பழங்களும் சைவபடையல் வைச்சு சாமிக்கு யார் அங்கு படைப்பது சைவவாடையது கொஞ்சமும் சகிக்கவில்ல தாக்கி முகம் சுழிக்க வைக்குது என்று செங்கண் துடிதுடிக்க அங்கம் பளபளக்க போங்கினானே பேய்க்காமனே!
மாட்டுக்கொடலெடுத்து மாலையாக போட்டுதான் பேச்சியம்மா இடத்துக்குஅவன் வந்தானே (மாட்டுக்கொடலெடுத்து) நானாளும் பகுதியே என்னென்னவோ சத்தம்தான் நீயெழுப்பும் சத்தம் எல்லாம் சுத்தம்தான் சத்தத்தாலே நேத்துபூரா தூங்கல உங்க சங்கு சத்தம் கொட்டு சத்தம் தாங்கல
ஏழுநாளில் இங்கிருந்து கிளம்பனும் அட இல்லாவிட்டால் நீங்களெல்லாம் புலம்பனும் அச்சமூட்டி எல்லாரையும் மிரட்டுனான் பொருளை அடிச்சு நொறுக்கி ஆவேசமா விரட்டுனான் விரட்டுனான் ஐயயோ விரட்டுனான் விரட்டுனான் ஐயயோ விரட்டுனான்
அன்னக்கொடுச்சி அழகுமயில் பேச்சியம்மா தன்னந்தனியே வாடுரவ கண்ணான கழுவநாதன் கண்டுமனம் கலங்கி நின்னு அவ உள்ளங்கை ரேகையை ஊடுருவி பார்த்துட்டான் புறங்கை ரேகையை புரட்டி புரட்டி பார்த்துட்டான்
உன்னையை காப்பாற்ற ஒரேஒரு ஆளைவிட்டா உலகத்திலே யாருமில்லை… ஆமாம் ஒட்டிநிக்கும் துன்பமெல்லாம் ஒட்டடையா ஓட்டிடுவான் ஒருத்தனாக.. ஆமாம் அனாதைக்கு ஆதாரவு தருவாண்டி அவன்பேரு நான்சொன்னேன் விருமாண்டி
விருமாண்டிய வேண்டிவரதான் அந்த பேச்சியம்மா புறப்புட்டாளே வனந்தரம் காடு கடந்து அந்த வண்ணமயில் புறப்புட்டாளே எறும்பேற முடியாத எட்டு சுத்து கோட்டைக்குள்ளே பாம்பேற முடியாத பத்து சுத்து கோட்டைக்குள்ளே ஆதரவு இல்லாத ஆறாம்பிடி கோட்டைக்குள்ளே அண்ணனிவ சந்திக்க அழகியவள் போனாளே!
விவரம் கோட்டு விருமாண்டி வீரம் கொண்டு பொங்கி எழுந்தானே! கன்னிப்பொண்ணு கதை கேட்டு கண்ணுசெவக்க எழுந்தானே! பெத்தபுள்ள துயரம் கேட்டு பெத்தவங்க துடிப்பது போல் பெரும்புழுதி புயலயடிக்க பேய்க்காமனும் இருக்குமிடம் பிரமாண்டம் கிடுகிடுக்க விருமாண்டி வந்தானே…வந்தானே…வந்தானே…
வெண்பொங்கல் தேங்காப்பழம் விபூதி – அதை வெறுப்பதென்ன அர்த்தம்கெட்ட கபோதி இது பேச்சியம்மா குடியிருக்கும் திடலுடா எதிர்த்து பேசினாக்க கிழிந்துபோகும் குடலுடா மாட்டுகுடலில் மாலைபோடும் பராரி உன்முதுகில் ஏறி செய்யப்போறேன் சவாரி… சவாரி.. சவாரி
இப்படி விருமாண்டி சொன்னதும் இரண்டு பேருக்கும் கடுமையா சண்டை நடந்துச்சு.அப்ப பூமியெல்லாம் நடுங்குச்சு மலையெல்லாம் உடைஞ்சுச்சு. இதைப்பார்த்த சிலபேரு வீணா ஏதுக்கையா சண்டை போடரிங்க, சமாதனமா பேசிதீர்த்துக்கலாம் அப்படின்னு சொன்னாங்க. அவங்களும் சம்மதிச்சாங்க. அதுக்கப்புறம் பஞ்சாயத்தார் தீர்ப்பு சொன்னாங்க.
என்ன சொன்னாங்க.
தொட்டப்பநாய்க்கனூரிலையும், மதுரை மொட்ட கோபுரம் பக்கத்துளேயும் கொடியென்னு நட்டுவைப்போம், உங்க ரெண்டு பேருலையும் யார் முதலபோய் அந்த கொடியை தூக்கிட்டு வாராகளோ, அவுங்களுக்கு அந்த எல்லை சொந்தமுன்னு பஞ்சாயத்தார் தீர்ப்பு சொல்ல பேய்க்காமன் யோசிச்சான். யோசிச்சு சதியொன்னு பண்ணுனான். விருமாண்டி கையில நொண்டி குதிரையொன்னு கொடுத்து, அவன் போன எங்கடா கொடிய தூக்கிக்கிட்டு வரப்போரான்னு நினைச்சான்.
ஆகா,..
மொட்டக்கோபுரந் தொட புறப்புட்டான் பேய்க்காமனும் தொட்டப்பநாய்க்கனூரை தொட்டுட விருமன் போனான் (மொட்ட) ஏய்க்க நினைச்ச அந்த பேய்க்காமன் எல்லையையும் சேர்த்தே அளந்துவந்து ஜெயிச்சானே விருமாண்டியும் ஜெயிச்சானே விருமாண்டியும்!
அண்ணே திரும்பிபோனா இங்கே இவன் சும்மா இருப்பானா பொண்ணுக்கு தொல்ல கொடுக்கும் எவனும் இங்கே நல்லாருப்பானா என்ன நானும் செய்யப்போறேன் எனக்கு ஒன்னும் தெரியவில்லையே அட அண்ணன்காரன் விருமன் போனா வேறு ஏதும் வழியுமில்லையே
அதனால என்ன பண்ணறதுன்னு யோசிச்சு ஒரு தந்திரம் பண்ணுனா பேச்சியம்மா.
என்ன செஞ்சா.
தான் விரலுள்ள போட்டிருந்த மோதிரத்தை கிணத்துக்குள்ள போட்டுட்டு, அண்ணே அண்ணே மோதிரம் விழுந்துடுச்சு எடுத்துக்கொடுங்கன்னு அண்ணேன்னு சொன்னா.
தங்கச்சி வேண்டுதல நிறைவேத்தி வைக்கிற அண்ணன், தங்கச்சுக்காக கிணத்துல குதிச்சு மோதிரத்த எடுக்கையில, கிணத்துமேல வைச்சிருந்த கல்லை வைச்சுமூடி பேச்சியம்மா விருமாண்டிய கிணத்துக்குள்ளேயே சிறை வைச்சுப்புட்டா.
என்ன தங்கச்சி, உனக்கு உதவிபண்ண வந்த எனக்கு இதுதான் நீ காட்டுற நன்றியான்னு விருமாண்டி கேட்க, பேச்சியம்மா யோசிச்சு தினம் தினம் அண்ணனுக்கு சூலி பொண்ணும், சூலி மாடும் கொடுக்க நம்மலால முடியுமா. கொடுத்தா உலகம்தான் இத தாங்குமா அப்படின்னு நெனச்சு, அண்ணன்கிட்ட சொன்னா, அண்ணே நீ கேட்ட படி உனக்கு பூசை பண்ண முடியாது. ஆனா நாங்க என்ன பண்ணுவோம்னா,.
ஆடிக்கடைசி வெள்ளி ஒனக்கொரு பூசை வப்போம் ஆகாசப் பொங்கல் வச்சு அப்போ படைய வப்போம்
ஆடிக்கடைசி வெள்ளி ஒனக்கொரு பூசை வப்போம் ஆகாசப் பூசை வச்சு அப்போ படைய வப்போம்
அதிலே நீ கேட்டதெல்லாம் ஆமாமா செஞ்சு வைப்போம். அதுக்காக எங்களையே எப்போவுமே காத்து இருந்து இங்கே நீ இருக்க வேனும் – எங்கும் பொங்கும் மங்கலம் தங்க வேனும். சாமி இங்கே நீ இருக்க வேனும் – எங்கும் பொங்கும் மங்கலம் தங்க வேனும்.
பாடலோடு கதையின் சுருக்கத்தை தந்து, மேலும் விவரங்கள் சேர்த்து சொல்லாம் என நினைத்திருந்தேன். பாடலை கேட்டு எழுதவே இரண்டரை மணி நேரம் எனக்கு தேவைப்பட்டதால், இன்று முடியவில்லை. விருமாண்டி பதிவு அடுத்த இடுகையிலும் தொடரும். |
||||||||
by Swathi on 01 Aug 2013 1 Comments | ||||||||
Tags: விருமாண்டி கதை பாடல் விருமாண்டி கதை விருமாண்டி பாடல் Virumandi Song Virumandi Movie Virumandi | ||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|