ரஷ்யாவின் வோல்கா பகுதியில், புராதன, விஷ்ணு சிலை ஒன்றை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
கடந்த ஏழு ஆண்டுகளாக ரஷ்ய நாட்டின், வோல்கா மாகாணத்தில் உள்ள, மாய்னா என்ற கிராமத்தில் ரஷ்ய நாட்டு தொல்லியல் துறையைச் சேர்ந்த வல்லுனர்கள் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த அகழ்வாராய்ச்சியில், புராதான விஷ்ணு சிலை உட்பட, பல தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. இது குறித்து, இந்த அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட, தொல்லியல் துறை வல்லுநர் ஒருவர் கூறியதாவது, மாய்னா கிராமத்தில் 1,700 ஆண்டுகளுக்கு முன்பு, சுமார் 8,000 பேர் வரை வசித்துள்ளனர். இந்த பகுதியில் 7 மற்றும் 10ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நிறுவப்பட்ட மகாவிஷ்ணுவின் சிலை, புராதன நாணயங்கள், பதக்கங்கள், மோதிரங்கள் மற்றும் ஆயுதங்கள் ஆகியவை கிடைத்துள்ளன.
நான்கு வேதங்கள் என அழைக்கப்படும், ரிக் வேதத்தில் கூட இப்பகுதி, புனிதத் தலமாகவும், 722 பறக்கும் விமானங்கள் இருந்ததாகவும், குறிப்பிடப்பட்டுள்ளது. ரஷ்யாவில் விஷ்ணு சிலை கிடைத்திருப்பதன் மூலம், இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையில், பண்டைய காலத்தில் இருந்தே தொடர்பு இருந்தது உறுதியாகியுள்ளது.
|