ராமானுஜர் அவதரித்ததால் இது, நித்ய சொர்க்கவாசல் தலமாகக் கருதப்படுகிறது. எனவே, இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று
ஆதிகேசவர், ராமானுஜர் இருவரும் பூதக்கால் மண்டபத்தில் எழுந்தருளுவர். அவ்வேளையில் சொர்க்கவாசல் திறப்பதைப்போல, இங்குள்ள மணிக்கதவை
திறப்பர்.ஸ்ரீபெரும்புதூரில் வசித்த கேசவ சோமையாஜி, காந்திமதி தம்பதியருக்கு 1017ம் ஆண்டு ஒரு ஆண்குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தையின் மாமா
பெரிய திருமலை நம்பி, திருப்பதியில் சேவை செய்து வந்தார். குழந்தை லட்சுமணர் போல இருந்ததால், "இளையாழ்வார்' எனப்பெயர் சூட்டினார். ஆதிகேசவர்
கோயில் எதிரே, ராமானுஜர் பிறந்த இடத்தில் மண்டபம் உள்ளது. சித்திரை விழாவின் 10 நாட்களும் ராமானுஜர் இங்கு எழுந்தருளுவார். திருநட்சத்திரத்தன்று
ஊஞ்சலில் தாலாட்டி, சங்குப்பால் தரும் வைபவம் இங்கு நடக்கும். இவ்வேளையில் ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம், ஸ்ரீவில்லிப்புத்தூர்,
திருமாலிருஞ்சோலை உள்ளிட்ட 36 திவ்ய தேசங்களில் இருந்து ராமானுஜருக்கு பரிவட்டம் கொண்டு வந்து மரியாதை செய்யப்படும்.ராமானுஜருக்கு யதிராஜர்
என்ற பெயரும் உண்டு. "யதி' என்றால் "சந்நியாசி', "ராஜர்' என்பது தலைமைப் பண்புடையவரைக் குறிக்கும். இத்தலத்தில் தாயார், "யதிராஜநாதவல்லி' என்ற
பெயரில் அருளுகிறாள். தன் பக்தரின் பெயரில் தாயார் இங்கு அருள்பாலிப்பது சிறப்பு.
ராமானுஜர் அவதரித்ததால் இது, நித்ய சொர்க்கவாசல் தலமாகக் கருதப்படுகிறது. எனவே, இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று ஆதிகேசவர், ராமானுஜர் இருவரும் பூதக்கால் மண்டபத்தில் எழுந்தருளுவர். அவ்வேளையில் சொர்க்கவாசல் திறப்பதைப்போல, இங்குள்ள மணிக்கதவை திறப்பர்.ஸ்ரீபெரும்புதூரில் வசித்த கேசவ சோமையாஜி, காந்திமதி தம்பதியருக்கு 1017ம் ஆண்டு ஒரு ஆண்குழந்தை பிறந்தது.
இந்தக் குழந்தையின் மாமா பெரிய திருமலை நம்பி, திருப்பதியில் சேவை செய்து வந்தார். குழந்தை லட்சுமணர் போல இருந்ததால், "இளையாழ்வார்' எனப்பெயர் சூட்டினார். ஆதிகேசவர் கோயில் எதிரே, ராமானுஜர் பிறந்த இடத்தில் மண்டபம் உள்ளது. சித்திரை விழாவின் 10 நாட்களும் ராமானுஜர் இங்கு எழுந்தருளுவார். திருநட்சத்திரத்தன்று ஊஞ்சலில் தாலாட்டி, சங்குப்பால் தரும் வைபவம் இங்கு நடக்கும்.
இவ்வேளையில் ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம், ஸ்ரீவில்லிப்புத்தூர், திருமாலிருஞ்சோலை உள்ளிட்ட 36 திவ்ய தேசங்களில் இருந்து ராமானுஜருக்கு பரிவட்டம் கொண்டு வந்து மரியாதை செய்யப்படும்.ராமானுஜருக்கு யதிராஜர் என்ற பெயரும் உண்டு. "யதி' என்றால் "சந்நியாசி', "ராஜர்' என்பது தலைமைப் பண்புடையவரைக் குறிக்கும். இத்தலத்தில் தாயார், "யதிராஜநாதவல்லி' என்ற பெயரில் அருளுகிறாள். தன் பக்தரின் பெயரில் தாயார் இங்கு அருள்பாலிப்பது சிறப்பு. |