பெருமாள் இத்தலத்தில் தாயாரை இடது தொடையில் அமர்த்தியபடி அருள்பாலிப்பது சிறப்பு.கொள்ளிடம் ஆற்றுக்கும் அய்யன் வாய்க்கால் என
அழைக்கப்படும் நதிக்கும் இடையே இந்தத் தலம் அமைந்துள்ளதால் இடையாற்றுமங்கலம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. சுமார் எண்ணூறு
ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்த ஆலயம்.மகாலட்சுமியை தன் மார்பில் சுமந்திருக்கும் திருமால் அவளைத் தமது மடியில் இருத்தியபடி காட்சிதரும்
திருத்தலங்களில் இதுவும் ஒன்று. தன்னை வணங்கும் பக்தர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும், திருமணமான தம்பதிகள் மணம் ஒன்றி வாழவும்
திருவுள்ளம் கொண்ட பெருமாள் இங்கு எழுந்தருளி அருள்பாலிப்பதாக தலவரலாறு கூறுகிறது.தாயாரை மடியில் இருத்திய நிலையில் சேவை சாதிக்கும்
மூலவரை வழிபடுவதால் கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும் எனவும்; மனவேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர் எனவும் பக்தர்கள்
நம்புகின்றனர். குறிப்பாக திருவோண நட்சத்திரத்தில் பெருமாளையும் தாயாரையும் ஆராதனை அபிஷேகம் செய்து வணங்குவது கூடுதல் சிறப்பு தரும்
செயலாகும்.
பெருமாள் இத்தலத்தில் தாயாரை இடது தொடையில் அமர்த்தியபடி அருள்பாலிப்பது சிறப்பு. கொள்ளிடம் ஆற்றுக்கும் அய்யன் வாய்க்கால் என அழைக்கப்படும் நதிக்கும் இடையே இந்தத் தலம் அமைந்துள்ளதால் இடையாற்றுமங்கலம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்டது இந்த ஆலயம். மகாலட்சுமியை தன் மார்பில் சுமந்திருக்கும் திருமால் அவளைத் தமது மடியில் இருத்தியபடி காட்சிதரும் திருத்தலங்களில் இதுவும் ஒன்று.
தன்னை வணங்கும் பக்தர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கவும், திருமணமான தம்பதிகள் மணம் ஒன்றி வாழவும் திருவுள்ளம் கொண்ட பெருமாள் இங்கு எழுந்தருளி அருள்பாலிப்பதாக தலவரலாறு கூறுகிறது. தாயாரை மடியில் இருத்திய நிலையில் சேவை சாதிக்கும் மூலவரை வழிபடுவதால் கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும் எனவும்; மனவேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர் எனவும் பக்தர்கள் நம்புகின்றனர். |