திருப்பதியைப் போல மகாலட்சுமி தாயார் தனிக்கோயிலில் அருள்பாலிப்பது சிறப்பு.பல அரசர்களால் காலந்தோறும் புதுப்பிக்கப்பட்ட இக்கோயிலை மன்னர்கள் நிர்வகித்து வந்தனர். மைசூரு மன்னர் ஆட்சி வந்ததும், இரு கோயில்களையும் 1858ம் ஆண்டு புதுப்பித்தார். கீழே உள்ள போக நரசிம்மரை தரிசித்த பின் பக்தர்கள் மேலேயுள்ள யோக நரசிம்மரை தரிசிக்க செல்கின்றனர்.
பக்தர்கள் விரும்பினால் மேலேயுள்ள கும்பி நரசிம்மர், மிகப்பழைய ஆஞ்சநேயர் மற்றும் கருடன் கோயிலையும் தரிசிக்கலாம். குன்றின் அடியில் ஒரு இடத்தில் நீரூற்று உள்ளது.ஒரு சமயம் ராமர் இந்தப் பகுதிக்கு வந்ததாகவும், அப்போது நாமம் இட நாமக் கட்டியை கரைக்க தண்ணீரைத் தேடியும் கிடைக்காததால், ஒரு அம்பு விட்டு இந்த நீருற்றை உருவாக்கியதாகவும் தல வரலாறு கூறுகிறது.
இந்த நீரூற்று இன்றும் இங்கு உள்ளது. ராமர் பாதமும் அருகில் உள்ளது. குன்றுக்கு சற்று தூரத்தில் மகாலட்சுமிக்குத் தனிக்கோயில் அமைந்துள்ளது மற்றொரு சிறப்பு. |