பிரகலாதனின் விருப்பப்படி நரசிம்மர், மூலஸ்தானத்தில் 16 திருக்கரங் களுடன், இரணியனை வதம் செய்த கோலத்தில் மிகப்பிரமாண்டமாக அருள்பாலிக்கிறார். வடக்கு நோக்கி சிறிய வடிவில் யோக நரசிம்மர், பாலநரசிம்மர் ஆகியோரும் உள்ளனர். இவ்வாறு ஒரே மூலஸ்தானத்தில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பதை காண்பது அரிது.நரசிம்மர் தனதுபக்தன் பிரகலாதனுக்காக இரண்யனை வதம் செய்தார்.
இதன் அடிப்படையில் இத்தலத்தில் 16 திருக்கரங்களுடன் நரசிம்மர் அருள்பாலிக்கிறார்.நரசிம்மர் கோயில்களில் உக்கிர மூர்த்தியான நரசிம்மர் லட்சுமியை மடியில் அமர்த்திய கோலத்தில் அருள்பாலிப் பார்.சில கோயில்களில் யோக நிலையில் தனித்து காட்சி தருவார். கடலூர் மாவட்டம் சிங்கிரி குடியில், 16 திருக்கரங்களுடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் உக்கிரமாக அருள் பாலிக்கிறார்.
ராஜராஜ சோழன் மற்றும் விஜயநகர மன்னர் களால் திருப்பணி செய்யப்பட்ட கோயில் இது. ஐந்து நிலை, ஏழு கலசங்களுடன் மேற்கு பார்த்த ராஜகோபுரமும், மிகப்பெரிய கொடி மரமும் உள்ளது.தாயார் கனகவல்லி தனி சன்னதியில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறாள். |