இத்தலத்தில் உள்ள நரசிங்கர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். மூலவரின் திருநாமம் நரசிங்க பெருமாளாக இருந்தாலும், முகம்
நரசிம்மருக்கு உரியதைப்போல் இல்லாமல் பெருமாளைப்போல தோற்றமளிக்கிறார். மண்டபத்தின் மேல்பகுதியில் மகாவிஷ்ணுவின் பத்து
அவதாரங்களையும் உணர்த்தும் விதமாக ஒரே சிலையில் வடிவமைக் கப்பட்டுள்ளதும், முன்புறம் யானையும், சிங்கமும் தவம் செய்யும் கோலத்தில்
"கஜகேசரி'யாக உள்ளதையும் காண கண்கோடி வேண்டும்.மகாவிஷ்ணுவின் நரசிம்ம அவதாரத்தைக் காண ஆஞ்சநேயர் விரும்பியதால் அவருக்கு
சோளிங்கபுரத்திலும், கருடனின் விருப்பத்தால் அவருக்கு அகோபிலத்திலும் காட்சி தந்து அருளினார். எனவே இங்கு இவ்விருவரும் மகாமண்டபத்தில்
துவாரபாலகர்களாக காட்சி தருகின்றர்.கொடிமரம், விமானம் இல்லை. மகாவிஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரமும், நவக்கிரகங்களை ஒத்துள்ளன. எனவே,
நவக்கிரகங்களை வணங்கி பெறும் பலன்களை, விஷ்ணுவின் அவதாரங்களை வணங்கிபெறலாம். அவ்வகையில் இங்குள்ள நரசிம்மர், செவ்வாய் கிரகத்தை
ஒத்துள்ளார். எனவே, இவரை வணங்கினால் செவ்வாய் தோஷம் நீங்கி, தடைப்பட்ட திருமணங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை.
இத்தலத்தில் உள்ள நரசிங்கர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள்புரிகிறார். மூலவரின் திருநாமம் நரசிங்க பெருமாளாக இருந்தாலும், முகம் நரசிம்மருக்கு உரியதைப்போல் இல்லாமல் பெருமாளைப்போல தோற்றமளிக்கிறார். மண்டபத்தின் மேல்பகுதியில் மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் உணர்த்தும் விதமாக ஒரே சிலையில் வடிவமைக் கப்பட்டுள்ளதும், முன்புறம் யானையும், சிங்கமும் தவம் செய்யும் கோலத்தில் "கஜகேசரி'யாக உள்ளதையும் காண கண்கோடி வேண்டும்.
மகாவிஷ்ணுவின் நரசிம்ம அவதாரத்தைக் காண ஆஞ்சநேயர் விரும்பியதால் அவருக்கு சோளிங்கபுரத்திலும், கருடனின் விருப்பத்தால் அவருக்கு அகோபிலத்திலும் காட்சி தந்து அருளினார். எனவே இங்கு இவ்விருவரும் மகாமண்டபத்தில் துவாரபாலகர்களாக காட்சி தருகின்றர். கொடிமரம், விமானம் இல்லை. மகாவிஷ்ணுவின் ஒவ்வொரு அவதாரமும், நவக்கிரகங்களை ஒத்துள்ளன.
எனவே, நவக்கிரகங்களை வணங்கி பெறும் பலன்களை, விஷ்ணுவின் அவதாரங்களை வணங்கிபெறலாம். அவ்வகையில் இங்குள்ள நரசிம்மர், செவ்வாய் கிரகத்தை ஒத்துள்ளார். எனவே, இவரை வணங்கினால் செவ்வாய் தோஷம் நீங்கி, தடைப்பட்ட திருமணங்கள் நடக்கும் என்பது நம்பிக்கை. |