கல்வி, செல்வம், வீரம் என அனைத்தையும் அருளும் வள்ளலாக, தாயாக, தந்தையாக, குருவாக, தெய்வமாக, கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாக பிரசன்ன வேங்கடேசப் பெருமாளாக விளங்குகிறார். இத்தலத்து விநாயகர் நவக்கிரகங்களுக்கு அதிபதியாக நவக்கிரகங்களை தன்னுள் அடக்கியபடி அருள்பாலிக்கிறார். இவரது முதுகில் சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக ஐந்து தலைநாகரின் மீது மேற்கு பார்த்த நிலையில் யோக நரசிம்மர் உள்ளார்.
சனி தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து தரிசித்தால், துன்பங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. பிள்ளையாரை நாம் நின்று தரிசிக்கும் இடமே ராசி மண்டலத்தில் தான். எனவே நாம் எந்த ராசிக்காரர்களாக இருந்தாலும், பிறந்த நேரம், நட்சத்திரம் சரியாக தெரியாவிட்டாலும் அனைவருக்கும் அருளை அள்ளித்தருவார்.இக்கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் நவகிரக விநாயகர், அவரது முதுகில் யோக நரசிம்மர், கருடன், ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்கள். இங்க வந்து வழிபட்டால் நலமும், யோகமும் ஒன்றாக கிடைக்கும் என்பது நம்பிக்கை. |