அபூர்வமான தாமோதரசாளக்கிராமம் ஒன்றும்; விஸ்வம்பர சாளக்கிராமம் ஒன்றும் இம்மடத்தில் ஆராதனை செய்யப்படுகின்றன.ஒரு சமயம் பரீட்சித்து மகாராஜாவின் மகனான ஜனமேஜய மகாராஜா தோல்நோயால் அவதிப்பட்டு நாரதரின் அறிவுரைப்படி தீர்த்த யாத்திரையாக துங்கா நதிக்கு வரும் சமயம் ஷிமோகா அருகில் ஹரிஹர் என்னும் இடத்தில் ஸ்நானம் செய்தார்.
அங்கு கைவல்ய தீர்த்தர் எனும் மகான் தவம் செய்து வந்தார். அவருக்கு பீமண்ணக் கட்டே கிராமத்தைச் சுற்றி சுமார் 25 சதுர மைல் பரப்புள்ள நிலங்களை தானமாக மகாராஜா அளித்தார். அதற்காக வழங்கப்பட்ட செப்புப் பட்டயத்தை இன்றும் ஷிமோகா நகர அருங்காட்சியகத்தில் காணலாம்.
மகாராஜாவின் நோய் முற்றிலும் குணமாக, பூதானம் பெற்ற கைவல்ய தீர்த்தர். பீம சேது முனிவிருந்த மடம் எனும் மடத்தை பீமண்ணக் கட்டேயில் ஸ்தாபித்தார். இது நடந்து ஏறக்குறைய 5023 ஆண்டுகளாகிறது. இச்சம்பவம் ஸ்கந்த புராணத்தில். ஸஹ்யாத்திரி காண்டத்தில் காணப்படுகிறது. |