இத்தலத்தை பெருமாளே கட்டினார் என்று வராகபுராணம் தெரிவிப்பதும், கேரளத்தின் இரண்டாவது பெரிய தெப்பக்குளம் என்ற பெருமையைப் பெற்றுள்ளதும் இக்கோயிலின் சிறப்பாகும்.வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக பெருமாளிடம் வேண்டி பலனடைபவர்கள் சந்தனக்காப்பு சாத்துகின்றனர். லட்சார்ச்சனை, புஷ்பாபிஷேகம், சந்தனாபிஷேகம், கலச திரு மஞ்சனம், துலாபாரம், கருடவாகன சேவைகளும் செய்கின்றனர்.
பால்பாயாசம், அரவணை, மோதகம், பஞ்சாமிர்தம், பானகம் ஆகியவை நிவேதனம் செய்கின்றனர். சிலர் வராஹ மூர்த்தியை குருவாகக் கொண்டுள்ளனர். கல்வியில் மேம்படுவதற்காக வியாழக்கிழமைகளில் இவருக்கு நெய்தீபம் ஏற்றுகின்றனர்.வெளிப்பிரகாரத்தை சுற்றம்பலம் என்கின்றனர். விநாயகர், சிவலிங்கம், ஐயப்பன், நாகராஜா பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.
தங்கக் கொடிமரம் உள்ளது. நாகதோஷம் உள்ளவர்கள் நாகராஜாவுக்கு பால் அபிஷேகம் செய்கின்றனர்.மேற்கு நோக்கிய கருவறையில், ஸ்ரீ வராகமூர்த்தி பத்ர பீடத்தில் அருள்பாலிக்கிறார். இவரது திருக்கரங்களில் சங்கு, சக்கரம் தரித்திருக்கிறார். |