பொதுவாக பல கோயில்களில் பெருமாளின் வலதுகரம் மேலுயர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவது போல் இருக்கும். ஆனால், இங்கு பெருமாள் மாறுபட்டு,
தனது வலது திருக்கரத்தை பூமியை நோக்கி நீட்டிய வண்ணம், திருப்பதியைப் போல் அருள்பாலிப்பது தனி சிறப்பு.இம்மலையில் யானைக்குகை என்னும் ஒரு
சுரங்கக் குன்றும் உள்ளது. யானை ஒன்றைப் பின்னாலிருந்து பார்ப்பது போன்ற அமைப்பில் உள்ளது. இச்சுரங்கத்தின் தலைப்பகுதி சேலம் மாவட்டம், ஆத்தூர்
அருகே உள்ள தலைவாசலில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. காரணம் கச்சிராய மன்னனின் எல்லையில் நுழையும் இடம் தலைவாசல் என்று
அழைக்கப்படுவதால், இந்த சுரங்கப்பாதையும் அதுவரை நீண்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இக்கோயிலிற்கு ராஜகோபுரம் இல்லை. முன்பகுதியில்
கருட ஸ்தம்பம் மிக உயரமாக உருளை வடிவ தூணாக நிற்கிறது.கி.பி. 15ம் நூற்றாண்டில் கச்சியராயன் என்ற குறுநில மன்னன் ஆண்டு வந்த பகுதி, அவன்
பெயராலேயே கச்சிராய பாளையம் என்று அழைக்கப்பெற்று, தற்போது கச்சிராப்பாளையம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரின் மையப்பகுதியில்
இயற்கையாக அமைந்துள்ள அழகிய மலைக்குன்றின் மேல் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது.
பொதுவாக பல கோயில்களில் பெருமாளின் வலதுகரம் மேலுயர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குவது போல் இருக்கும். ஆனால், இங்கு பெருமாள் மாறுபட்டு, தனது வலது திருக்கரத்தை பூமியை நோக்கி நீட்டிய வண்ணம், திருப்பதியைப் போல் அருள்பாலிப்பது தனி சிறப்பு.இம்மலையில் யானைக்குகை என்னும் ஒரு சுரங்கக் குன்றும் உள்ளது. யானை ஒன்றைப் பின்னாலிருந்து பார்ப்பது போன்ற அமைப்பில் உள்ளது.
இச்சுரங்கத்தின் தலைப்பகுதி சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தலைவாசலில் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. காரணம் கச்சிராய மன்னனின் எல்லையில் நுழையும் இடம் தலைவாசல் என்று அழைக்கப்படுவதால், இந்த சுரங்கப்பாதையும் அதுவரை நீண்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இக்கோயிலிற்கு ராஜகோபுரம் இல்லை.
முன்பகுதியில் கருட ஸ்தம்பம் மிக உயரமாக உருளை வடிவ தூணாக நிற்கிறது.கி.பி. 15ம் நூற்றாண்டில் கச்சியராயன் என்ற குறுநில மன்னன் ஆண்டு வந்த பகுதி, அவன் பெயராலேயே கச்சிராய பாளையம் என்று அழைக்கப்பெற்று, தற்போது கச்சிராப்பாளையம் என்று அழைக்கப்படுகிறது. இவ்வூரின் மையப்பகுதியில் இயற்கையாக அமைந்துள்ள அழகிய மலைக்குன்றின் மேல் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. |