மதுரை வைகை ஆற்றில் சித்ராபவுர்ணமியன்று இறங்கும் கள்ளழகர் தரும் முதல் மரியாதையை பெரும் பெருமாள் இவர். பெருமாள் இத்தலத்தில் நின்ற கோலத்தில் வீரராகவப்பெருமாளாகவும், கிடந்த கோலத்தில் ரங்கநாதராகவும், அமர்ந்த கோலத்தில் யோக நரசிம்மராகவும் மூன்று நிலைகளில் அருளுகிறார். வைகை ஆற்றில் மஞ்சள் நிற தங்கக்குதிரையில் அழகர் இறங்குவார்.
அதற்கு முன்னதாக, வெள்ளிக் குதிரையில் வரும் வீரராகவப் பெருமாள் ஆற்றில் இறங்கி, வையாழி நடைபயில்வார்.முன்னும் பின்னும் ஆடிக்கொண்டு செல்வதையே இப்படி சொல்வர். "அண்ணா வாரும்' என கள்ளழகரை ஆற்றிற்குள் அழைத்து வருவார்.ஆற்றில் நடுமண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருளும்போது, அவரை வீரராகவப்பெருமாள் மூன்று முறை சுற்றி வருவார்.
அவருக்கு கள்ளழகர் சார்பாக தீர்த்தம், பரிவட்டம், மாலை என முதல் மரியாதை செய்யப்படுகிறது.அதன்பின் வீரராகவப்பெருமாள் ஆற்றில் உள்ள நடு மண்டபத்தில் இருந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார். |