கொடிக்கம்பத்திற்கு பதிலாக தீப ஸ்தம்பம் உள்ளது.தெலுங்கு மொழி பேசும் திம்மராஜா என்ற குறுநில மன்னர் திருநெல்வேலியின் ஒரு பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்தார். இவர் திருப்பதி வெங்கடாசலபதியின் பக்தர். ஏழுமலையானை அடிக்கடி தரிசிப்பதற்காக தன் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் ஒரு சிறிய கோயிலைக் கட்டி, ஏராளமான நிலங்களையும் வருமானத்துக்காக எழுதி வைத்தார்.
கோயிலில் வெங்கடாசலபதி பிரதிஷ்டை செய்யப்பட்டார்.தன் பெயரால் கோயில் இருந்த பகுதிக்கு "திம்மராஜபுரம்' என்று பெயரிட்டார். தாமிரபரணி நதியை ஒட்டி கோயில் அமைந்தது. கோயில் அமைந்துள்ள பகுதியில் ஓடும் இந்நதி "ஜடாயு தீர்த்தம்' என பெயர் பெற்றது. அதுவே இக்கோயிலின் தீர்த்தமும் ஆகும். பிற்காலத்தில் உற்சவர் வெங்கடாசலபதி சிலை அமைக்கப்பட்டது.
ஸ்ரீதேவி, பூதேவியுடன் அவர் அருள்பாலிக்கிறார். ஆடி அமாவாசையன்று தாமிரபரணியில் நீராடி விட்டு பிதுர் தர்ப்பணம் செய்து, இப்பெருமாளை வணங்கினால், முன்னோரின் அருள் பூரணமாகக் கிட்டும் |