இங்கு பெருமாள் சாளகிராம சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் உள்ள வெங்கடேசர் நான்கு புறமும் பட்டையாகவும், மத்தியில் கூராக, வாழைப்பூ வடிவில், சுயம்பு லிங்கம் போல காட்சி தருவது வேறு வைணவத்தலங்களில் காண முடியாத சிறப்பாக உள்ளது.இத்தலத்தில் உள்ள வெங்கடேசர் நான்கு புறமும் பட்டையாகவும், மத்தியில் கூராக, வாழைப்பூ வடிவில், சுயம்பு லிங்கம் போல காட்சி தருவது வேறு வைணவத்தலங்களில் காண முடியாத சிறப்பாக உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைக்குச் சென்ற துர்வாச முனிவர் இங்கு வீற்றிருக்கும் வெங்கடேசரை வழிபட்டு சென்று பின்பு மோட்சம் அடைந்துள்ளார். திருப்பதி வெங்கடேசப் பெருமாளே இவ்விடத்தில் வீற்று பக்தர்களுக்கு அருள்பாலிப் பதாக கருதப்படுவதால், திருப்பதிக்கு சென்று பெருமாளை தரிசனம் செய்து வேண்டுதலை நிறைவேற்ற முடியாதவர்கள் இத்தலத்திற்கு வந்து நிறைவேற்றுகின்றனர்.
இதனால் இத்தலம் "மேலத்திருப்பதி' என்ற சிறப்பு பெயருடனும் அழைக்கப் படுகிறது. திருப்பதிக்கு ஏழுமலைகளைக் கடந்து செல்வதைப் போலவே, இங்கு செல்லவேண்டுமெனில் இயற் கையாகவே அமைந்த ஏழு மேடுகளைக் கடந்தே செல்ல வேண்டும். |