ராமர் வழிபட்ட பெருமாள் கோயில். கர்ப்பகிரகத்தில் மூலவர் செம்பொன்ரங்க பெருமாள் நான்கு கரத்துடன் அருள்பாலிக்கிறார்.பெருமாள் அருகில் பத்மாவதியும், ஆண்டாளும் காட்சியளிக் கிறார்கள். உடன் உற்சவ மூர்த்திகள் இருக்கின்றனர்.ஏழை ஒருவனது தோஷத்தைப்போக்கி அவனுக்கு புதையலை காட்டிய வள்ளல் இந்த பெருமாள். சங்க காலத்தில் செங்கம் நகரை "செங்கண்' என அழைத்தனர்.
இதை திம்மப்பன் ஆட்சி செய்த போது, "தளவா நாயக்கன்' என்ற குறுநில மன்னன் கப்பம் வசூல் செய்ய செங்கண் நகருக்கு வந்திருந்தான். அப்போது இவனும் இவனது குடும்பத்தினரும் கட்டியதே இக்கோயில்.700 ஆண்டுகளுக்கு முன் கோயில் கட்டப்பட்டது. இந்த கோயிலுக்கும் 60 அடி தொலைவிலுள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கும் சுரங்கப்பாதை இருந்திருக்கிறது. போர்க்காலங்களில் மன்னர்கள் இந்த பாதையை பயன்படுத்தி உள்ளனர். |