பொதுவாக பெருமாள் கோயில்களில் சந்தான கிருஷ்ணன், ஒரு சிறு குழந்தை வடிவில் உற்சவருக்கு அருகில் இருப்பார். ஆனால் இங்கு பாமா, ருக்மணியுடன் மூலஸ்தானத்தில் அருள்பாலிப்பது சிறப்பு. ஒருகாலத்தில், இந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லாமலேயே இருந்தது. அப்படியே குழந்தை பிறந்தாலும், சீக்கிரமே ஏதேனும் நோய் நொடியால் குழந்தை இறந்துபோனதாம்.
இதில் வருந்திக் கலங்கிய மக்கள், வேணுகோபாலனிடம் எங்கள் குலத்தை தழைக்கச் செய்யுங்கள்; எங்கள் வம்சத்தை வளரச் செய்யுங்கள் என வேண்டினர். இதில் மனமிரங்கிய வேணுகோபாலன், அப்படியே ஆகட்டும் என அருளினார். அதன் பிறகு, குழந்தைகள் பிறந்தன; பிறந்த குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்ந்தன. எனவே, இவருக்கு சந்தான வேணுகோபாலன் எனத் திருநாமம் அமைந்ததாகச் சொல்கின்றனர். |