முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக அறிவிக்க வேண்டும் என பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு நடிகர் விவேக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அப்துல் கலாம் அவர்களின் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றி வரும் விவேக், கடந்த இரண்டு வருடங்களாக படங்கள் எதுவும் ஒப்புக் கொள்ளாமல் "க்ரீன் கலாம்" என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக தொடர்ச்சியாக மரங்கள் நடுவது என்று மக்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் பேசி வருகிறார். இந்நிலையில் நேற்று அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு, "அப்துல் கலாம் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக அறிவிக்க, பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். தற்போதுள்ள மாணவர்கள் பலருக்கும் முன்னோடியாக அப்துல் கலாம் திகழ்ந்து வருகிறார்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் மோடியின் ட்விட்டர் பக்கத்தை குறிப்பிட்டு கோரிக்கை விடுத்துள்ளார் நம்ம சின்ன கலைவாணர் விவேக்.
|