LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

சென்னை அருகில் எரிமலை இருக்கிறதா ! தீவிர ஆய்வில் 3 அரசு நிறுவனங்கள் !

எரிமலை இல்லாத நாடுகளில் இந்தியாவும் ஓன்று என நாம் நினைத்து கொண்டிருக்கின்றோம், ஆனால் நமது நினைப்பை பொய்யாக்கும் விதமாக தற்போது ஒரு புதிய செய்தி வெளியாகியுள்ளது. சென்னையின் அருகில் எரிமலை இருப்பதுதான் அந்த புதிய செய்தி, இந்த செய்தியை உறுதி செய்வதற்காக மூன்று நிறுவனங்கள் எரிமலை குறித்த ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. சென்னையிலிருந்து சுமார் 100 முதல் 110 கிலோ மீட்டர் தொலைவில் கடந்த 1757 ஆம் ஆண்டில் எரிமலை ஒன்று வெடித்து லாவாவை கக்கியதாகவும், மேலும், அந்தப் பகுதி முழுவதும் கடல் நீரின் நிறம் மாறியதாகவும், ஒரு வெளிநாட்டு மாலுமி தனது பயணக் குறிப்பில் குறிப்பிட்டிருந்தார். இதே போன்று சில விஞ்ஞானிகளும் தங்களது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளனர். பெயர் சூட்டப்படாத இந்த எரிமலை குறித்த தகவல் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் இதுவரை எந்த விளக்கத்தையும் வெளியிடாமல் இருந்தது.இதனிடையே பூவுலகின் நண்பர்கள் என்ற சமூக அமைப்பினர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த எரிமலை குறித்த தகவலை இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திடம் கேட்டுள்ளனர்.எரிமலை இல்லை என்று மறுப்பு தெரிவிக்காத அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், எரிமலை இருப்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை என் தகவல் அளித்துள்ளது, இருப்பினும் இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம், தேசிய கடலியல் ஆய்வு நிறுவனம், மற்றும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் ஆகியவை வங்கக் கடலில் எரிமலை இருக்கிறதா? என்பதை அறியும் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புதிய தகவலையும்  வெளியிட்டுள்ளது.

by Swathi   on 25 Jun 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் சுட்டெரிக்கும் வெயில்- கேரளாவின் "வாட்டர் பெல்" முறை அறிமுகம்.
குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா. குறளில் மேலாண்மை’ ஆங்கில நூல் வெளியீட்டு விழா.
சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல். சென்னையிலிருந்து அயோத்தி செல்கிறது தங்கத் தகட்டில் எழுதிய ராமாயணப் புனித நூல்.
40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர். 40 வருட அடையாளம்! முடிந்தது டீல்.. மூடப்படும் உதயம் தியேட்டர்.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா. சிவகங்கை மாவட்டத்தில் பொன்னழகி அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோதத் திருவிழா.
தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு. தமிழகம் காரைக்குடி அருகே 148 ஆண்டுக்காலக் கல்வெட்டு கண்டுபிடிப்பு.
மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன! மறைந்த பிறகும் மற்றவர்களுக்கு உதவும் நடிகர் டேனியல் பாலாஜி.. கண்கள் தானம் அளிக்கப்பட்டன!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.