LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ

வால்டேர்

ஒரு தேசம் சிந்திக்கத் தொடங்கிவிட்டால் ,

அதை எந்தச் சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது .


உலக வரலாற்றில் நடந்த பிரெஞ்சுப் புரட்சியை மக்கள் யாரும் மறந்து விட முடியாது . அது நிலப்பிரபுத்துவத்திற்கு முடிவு கட்டியது . இதனால் உலகில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டது . சுதந்திரம் ! சமத்துவம் ! சகோதரத்துவம் ! என்ற புதிய முழக்கம் புரட்சி முழக்கமாக ஒலித்தது . இந்த பிரெஞ்சுப் புரட்சிக்கு தூண்டுகோலாக எழுதிய மிகப் பெரிய சமூக எழுத்தாளர் வால்டேர் ( Voltair ) ஆவார் . இவர் பழமையை உடைத்தார் . இவர் வாழ்ந்த 18 ஆம் நூற்றாண்டை வால்டேரின் யுகம் என்று வரலாறு கூறுகிறது . இவர் பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் நகரில் 1694 ஆம் ஆண்டு நவம்பர் 21 அன்று பிறந்தார் . இவரின் பெயர் பிரான்சுவா - மாரீ அரூவே என்பதாகும் . இவரின் புனைபெயர்தான் வால்டேர் . இவர் நாடகம் , கவிதை , புதினம் , கட்டுரை , வரலாறு , அறிவியல் என பலதுறைகளில் எழுதினார் .

கடுமையான விதிகளும் , தண்டனைகளும் விதிக்கப்பட்டபோதும் வெளிப்படையாகப் பேசும் சீர்திருத்தவாதியாக இருந்தார் . பிரான்சு மக்களுக்கு கல்வி புகட்டுவதற்காக 24 தொகுதிகள் கொண்ட நூல்களை எழுதினார் . மதகுருமார்கள் மற்றும் மூடநம்பிக்கைக்கு எதிராகவும் விமர்சனம் செய்து வந்தார் . அவர் 1778 ஆம் ஆண்டு மே 30 இல் இயற்கை எய்தினார் . சீன் நதிக்கரையில் அடக்கம் செய்யப்பட்டார் . 13 ஆண்டுகளுக்குப் பிறகு கல்லறை திறக்கப்பட்டு அவரது எலும்புகள் அடங்கிய பெட்டி பாரீஸில் புதைக்கப்பட்டது . இந்த இடத்தில்தான் சர்வதிகாரம் உங்களைச் சங்கிலியால் பிணைத்தது . இன்று அதே இடத்தில் மக்கள் உங்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறார்கள் என்ற வரிகள் பொறிக்கப்படிருந்தன .

by Swathi   on 02 Dec 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சென்னை புத்தகத் திருவிழாவில்   சென்னை புத்தகத் திருவிழாவில் "தமிழர் உணவு" நூல் வெளியீடு
சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம் சிந்தனை தொழில் செல்வம்  -டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி வானதி பதிப்பகம்
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.