தமிழகத்தில் இன்று இறுதி வாக்களர் பட்டியல் வெளியிடப்படுகிறது.முன்னதாக கடந்த 6 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில மாநிலங்களில் பட்டியல் தயாரிப்பு பணி முடிவடையாத காரணத்தால் 10 ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி, தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. ஜனவரி 1, 2014 ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு புதிதாக 30 லட்சம் வாக்காளர்கள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. வாக்குச்சாவடி மையங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியாகும் பட்டியலில் இடம்பெற்றிருப்போர் மட்டுமே வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
|