LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மரணத்துள் வாழ்வோம்

காத்திருத்தல்

நேற்றுப் போல இருக்கிறது
எங்கள் திருமணம் நடந்தது.

பந்தலைப் பி¡¢க்குமுன்,
வந்த உறவினர் போகுமுன்
நீதான் போய்விட்டாய்.

என் மன ஆழத்திற்கு
இது தொ¢ந்து தானிருந்தது
இருந்தும்,
திருமணம் சிலவேளை
உனை மாற்றலாமென...
பலவந்தமாக -
ஆம், பலவந்தமாகத்தான்
உன்னை மணந்தேன்.
எனக்கு அப்போது
உன் லட்சியத்தின் களபா¢மாணமோ
உன்னைத் தடைசெய்ய முடியா தென்பதோ
விளங்கியிருக்கவே யில்லை.

இப்போது துக்கப்படுகிறேன் -
அன்று உன்னைத்
தடைசெய்ய நினைத்ததற்கு.
உன் லட்சியத்தின் நியாயம்
இப்போதுதானே பு¡¢கிறது.

எனினும் ஒரு சந்தோசம்
மனைவியான படியால் தானே
உன் சாதனைகளில் மகிழ்தலும்
உனை நினைத்து அழுதலும்
சாத்தியமாயின.

இரவுகள் தூங்குவதற் கென்பது
என்வரையில் பொய்யாயிற்று.
நிசப்த ராத்தி¡¢களில்
இடையிட்டு எழும் ஒலிகளில்
காலடி ஓசைக்காகக்
காத்திருந்து காத்திருந்து...
கனத்த இருளினுள்
கறுப்புப் பூனையைத்
தேடித் தேடித் தோற்று..!

சிலவேளை காலடிகள்
கனத்த பூட்ஸ்களாய்
நெஞ்சில் -
கண்ணிவெடி விதைக்கும்.

ஆனால்,
நான் இன்னும்
நம்பிக்கை இழக்கவில்லை.

காத்திருந்த இரவுகள்
கணக்கு வைக்க முடியாமற்
பெருகி விட்டன
கல்யாணத்தன்று நட்ட முருக்கு
கொப்பும் கிளையுமாய்
சிவப்பாய்ப் பூத்திருக்கு.

பாலர் வகுப்புக்குச் செல்லும்
மகன் கேட்கிறான்:
'ஏனம்மா
எங்கட வீட்டுப் பின்கதவை -
நீ பூட்டுறேல்ல? '

'முன்கதவு திறந்திருந்தா மட்டும்
கண்டவன் எல்லாம் நுழைவான்
பூட்டு பூட்டு எண்டுவாய்.'

எனது காத்திருத்தல்கள்
அவனுக்குப் பு¡¢ய
இன்னும் சில காலமாகாலாம்.
அதன் பின்,
அவன்
கேள்வி கேட்க மாட்டான்.

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
காதலா காமமா? காதலா காமமா?
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.