என்எல்சி தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் நிலக்கரிச் சுரங்கங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. என்எல்சியின் பங்குகளை தனியாருக்கு விற்பதை எதிர்த்து என்எல்சி தொழிலாளர்கள் சுமார் 30 ஆயிரம் பேர் கடந்த 3 ஆம் தேதி இரவிலிருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மின் உற்பத்தி படிப்படியாக குறைந்து வருகிறது. சுரங்கத்தின் நீர்க்கட்டுப்பாடு பிரிவைச் சேர்ந்த தொழில்நுட்ப ஊழியர்களும் நேற்று முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளதால் நிலக்கரிச் சுரங்கங்களில் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் துணை மேலாளர் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு உற்பத்தில் 500 மெகாவாட் மின்சாரம் குறைந்துள்ளதாகவும், இதே நிலை நீடித்தால், நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டு மின் உற்பத்தியை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
|