|
|||||
நாம் இந்நாட்டு மன்னர்கள் |
|||||
வரலாற்றைத் தொலைத்துவிட்டோம்
வாழ்ந்ததை மறந்துவிட்டோம்
ஏமாளியாய் இருந்துவிட்டோம்
எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்
பொறுப்பற்றத் தலைவர்களால்
படுகுழியில் தள்ளப்பட்டோம்.....!
கல்வி பெறத்தவறியதால்
முட்டாளாய் ஆகிவிட்டோம்
பல காலம் இருளிலே இருந்ததாலே
கருத்துக் குருடர்களாய் வாழ்ந்து விட்டோம்
படுமோசமாய் வாழ்வில் வீழ்ந்து விட்டோம்
தன்னிலை மறந்து
உண்ணும் சோற்றிலே மண்ணை
வாரிப் போட்டுக் கொண்டோம்......!
வஞ்சகத் தலைவர்களால்
வாழ்வைத் தொலைத்து விட்டோம்
சந்ததிகள் கருகிக் காணாமல் போய்விட்டோம்
நயவஞ்சகர்களின் கால் பிடித்து ஏமாந்து விட்டோம்
பிறரிடம் குட்டு வாங்கினோம்
பிறர் ஏளனப் பேச்சால் உடல் குறுகினோம்
போதும் போதும் போதும்
இனி ஏமாந்ததுப் போதும்.....!
இனி மனிதனாய் வாழக்கற்றுக் கொள்
தலைவன் உனக்கு இனி எவருமில்லை
உனக்கு நீயே தலைவன்
எவருக்கும் நீ அடிமையில்லை
சுயமாய் வாழ உறுதிக்கொள்
வாழ்க்கைப் பாடத்தைப் பெற்றுக் கொள்
சேர்ந்து வாழக் கற்றுக்கொள்
அனுபவம் உனக்குச் செங்கோல்
அது வாழ்வு தரும் மந்திரக் கோல்.....!
நல்லாட்சி மலர்வதற்கு
சொல்லாட்சி தந்திடுக
நீதியான ஆட்சிதனைத்
துணிவாய்த் தேர்ந்திடுக
கபட நாடகம் போடுவோரை
வேரோடுச் சாய்த்திடு……!
அரை நூற்றாண்டு
கண்ணீரில் மிதந்தது போதும்
தமிழர்கள் இரண்டும் கெட்டவர்கள் என்ற
கெட்டப் பெயரைப் போக்கி
அறிவார்ந்த சமூகமாக
ஓட்டு மூலம் காட்டிடுக.....!
பொன்னான ஆட்சிக்குப் போடு ஓட்டு
பொல்லாத ஆட்சிக்கு வைத்திடு வேட்டு
நம்மை கிள்ளுக்கீரையாக எண்ணுவோரை
புறம் தள்ளுவோம்
வஞ்ச எண்ணத்தை விதைக்கும்
மகா துரோகிகளைத் தூக்கி எறிவோம்
மலேசிய மக்களின் ஒற்றுமைக்கு
குந்தகம் விளைவிக்கும்
ஊழல் பேர்வழிகளைக் களையெடுப்போம்.....!
நாட்டின் வளங்களைக் கையப்படுத்தி
இனங்களிடையே பிரிவை ஊட்டும்
சுயநலப் பேர்வழிகளை ஒழித்திடுவோம்
நம் நாடு அமைதிப் பூங்காவாக
மீண்டும் உருமாற்றம் பெறுவதற்கு
அணிதிரள்வோம் அரக்கர்களை அழிப்போம்.....!
விவேகமாக வாக்களிப்போம்
வளமான நாட்டை உருவாக்குவோம்
இனியாவது தமிழர்கள் இங்கு
இனமானத்துடன் வாழ்வோம்......!
வரலாற்றைத் தொலைத்துவிட்டோம் வாழ்ந்ததை மறந்துவிட்டோம் ஏமாளியாய் இருந்துவிட்டோம் எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் பொறுப்பற்றத் தலைவர்களால் படுகுழியில் தள்ளப்பட்டோம்.....!
கல்வி பெறத்தவறியதால் முட்டாளாய் ஆகிவிட்டோம் பல காலம் இருளிலே இருந்ததாலே கருத்துக் குருடர்களாய் வாழ்ந்து விட்டோம் படுமோசமாய் வாழ்வில் வீழ்ந்து விட்டோம் தன்னிலை மறந்து உண்ணும் சோற்றிலே மண்ணை வாரிப் போட்டுக் கொண்டோம்......!
வஞ்சகத் தலைவர்களால் வாழ்வைத் தொலைத்து விட்டோம் சந்ததிகள் கருகிக் காணாமல் போய்விட்டோம் நயவஞ்சகர்களின் கால் பிடித்து ஏமாந்து விட்டோம் பிறரிடம் குட்டு வாங்கினோம் பிறர் ஏளனப் பேச்சால் உடல் குறுகினோம் போதும் போதும் போதும் இனி ஏமாந்ததுப் போதும்.....!
இனி மனிதனாய் வாழக்கற்றுக் கொள் தலைவன் உனக்கு இனி எவருமில்லை உனக்கு நீயே தலைவன் எவருக்கும் நீ அடிமையில்லை சுயமாய் வாழ உறுதிக்கொள் வாழ்க்கைப் பாடத்தைப் பெற்றுக் கொள் சேர்ந்து வாழக் கற்றுக்கொள் அனுபவம் உனக்குச் செங்கோல் அது வாழ்வு தரும் மந்திரக் கோல்.....!
நல்லாட்சி மலர்வதற்கு சொல்லாட்சி தந்திடுக
நீதியான ஆட்சிதனைத் துணிவாய்த் தேர்ந்திடுக கபட நாடகம் போடுவோரை வேரோடுச் சாய்த்திடு……!
அரை நூற்றாண்டு கண்ணீரில் மிதந்தது போதும் தமிழர்கள் இரண்டும் கெட்டவர்கள் என்ற கெட்டப் பெயரைப் போக்கி அறிவார்ந்த சமூகமாக ஓட்டு மூலம் காட்டிடுக.....!
பொன்னான ஆட்சிக்குப் போடு ஓட்டு பொல்லாத ஆட்சிக்கு வைத்திடு வேட்டு நம்மை கிள்ளுக்கீரையாக எண்ணுவோரை புறம் தள்ளுவோம் வஞ்ச எண்ணத்தை விதைக்கும் மகா துரோகிகளைத் தூக்கி எறிவோம் மலேசிய மக்களின் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் ஊழல் பேர்வழிகளைக் களையெடுப்போம்.....!
நாட்டின் வளங்களைக் கையப்படுத்தி இனங்களிடையே பிரிவை ஊட்டும் சுயநலப் பேர்வழிகளை ஒழித்திடுவோம் நம் நாடு அமைதிப் பூங்காவாக மீண்டும் உருமாற்றம் பெறுவதற்கு அணிதிரள்வோம் அரக்கர்களை அழிப்போம்.....!
விவேகமாக வாக்களிப்போம் வளமான நாட்டை உருவாக்குவோம் இனியாவது தமிழர்கள் இங்கு இனமானத்துடன் வாழ்வோம்......!
|
|||||
by Swathi on 08 Apr 2013 1 Comments | |||||
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|