|
|||||
இணையதளங்களில் தேர்தல் பிரச்சாரம் : புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தேர்தல் ஆணையம் !! |
|||||
சமூக வலைதளங்களில், தேர்தல் பிரச்சாரம் செய்ய கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அடுத்த இரண்டு மாதத்தில், டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சட்டீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. வாக்காளர்களை கவர்வதற்காக, அரசியல் கட்சிகள், நாளிதழ்கள், தொலைகாட்சிகள், இணையதளங்கள் ஆகியவற்றில் விளம்பரம் செய்கின்றன. ஏற்கனவே, நாளிதழ்கள், மற்றும் தொலைகாட்சிகள் ஆகியவற்றில், அரசியல் கட்சிகளின் விளம்பரங்களை வரைமுறை படுத்தியுள்ள தேர்தல் ஆணையம், தற்போது இணையதள விளம்பரங்களையும் வரன்முறைப்படுத்த முடிவு செய்துள்ளது. இது குறித்து, தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,
இணையதளங்கள், இணையதளம் சார்ந்த ஊடங்கங்கள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில், எந்த அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முன் அனுமதி பெறாமல் விளம்பரங்கள் வெளியிடக் கூடாது.
இணையத்தில் வெளியிடப்படும் விளம்பரங்கள், தகவல்களுக்கு கொடுக்கப்படும் கட்டணம், இவற்றை தயாரிப்பதற்காக செய்யப்படும் செலவு ஆகியவற்றை கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் செலவு கணக்கில் குறிப்பிட வேண்டும்.
கட்சிகள், வேட்பாளர்களை தவிர்த்து, மற்றவர்களோ அல்லது நிறுவனங்களோ, அமைப்புகளோ வெளியிடும் தேர்தல் சம்பந்தப்பட்ட தகவல்கள், விளம்பரங்களை கையாள்வது பற்றி மத்திய தகவல் தொடர்பு மற்றும் செய்தி ஒலிபரப்பு அமைச்சகத்துடன் தேர்தல் ஆணையம் கலந்து ஆலோசித்து வருகிறது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களுடைய இ-மெயில் முகவரி மற்றும் சமூக வலைதளங்களின் கணக்கு விவரங்களை படிவம்-26ல் அளிக்கப்படும் வாக்குமூலத்தில் குறிப்பிட வேண்டும். |
|||||
by Swathi on 25 Oct 2013 0 Comments | |||||
Tags: தேர்தல் ஆணையம் இணையதளம் சமூக இணையதளம் அரசியல் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையம் Social Websites Election Commission | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|