|
||||||||
மரவள்ளிக்கு களை நல்லதே |
||||||||
மரவள்ளி நடவு செய்து ஒரே வாரத்தில் கோரை காட்டை மூடிவிட்டது..
ஒரு வாரத்துக்கு முன்பு ஐந்து ஆண் ஆட்களை வைத்து களை வெட்டிவிட்டேன்.. இன்று நான்கு ஆட்களை வைத்து வரப்பு எடுத்துவிட்டேன்.. இன்னும் நான்கு நாட்கள் காய வைத்து நீர்பாய்ச்சும் போது மாட்டு கோமியத்தை கலந்து விட்டு இடையில் பஞ்சகவ்யா தெளித்துவிட்டால் செடி மேலே வந்து மரவள்ளி காட்டை கட்டிவிடும்..
ஆக களை வெட்டுக்கு என்று இந்த ஐம்பது சென்ட் நிலத்துக்கு ஆன கூலி நான்காயிரம் ரூபாய்.. ரசாயன களைகொல்லி தெளித்திருந்தால் இண்டாயிரம் தான் ஆகியிருக்கும்.. ஆனால் மறுபடியும் மண்ணை வளபடுத்த பல ஆயிரங்களும், பலவருடங்களும் விரயமாகும்..
ஆதலால் கோரையோ, சாரணையோ, நாம் விளைவிக்கும் பயிரைவிட களை உயரம் குறைவாக இருந்தால்
"களை நல்லதே "..
Thiru Murthy |
||||||||
by Swathi on 14 Jul 2017 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|