LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    ஜோதிடம் Print Friendly and PDF
- நட்சத்திர பலன்கள்

நட்சத்திர பலன்கள் (18 – 9 – 2016 முதல் 24 - 9 – 2016 வரை)

ஜோதிட இமயம் அபிராமி சேகர்

Cell99948 11158 

மேஷம்

(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்–பரணி-1, 2, 3, 4 பாதங்கள்–கார்த்திகை-1, பாதம்)

அஸ்வினி  

இந்த வாரம் பணவரவு அதிகரிப்பது போல், செலவுகளும் கூடும். மனக் கவலைகளை மனைவியின் அரவணைப்பு குறைக்கும். தாயின் சீரான ஆரோக்கிய நிலை மற்றும் குழந்தைகளின் துடிப்பான செயல்பாடுகள் கண்டு, உங்கள்  முகத்தில் புன்னகை தவழ்கிறதே ? சிலருக்குப் புதுவீடு கட்டுதல் பழைய வீட்டைப் புதுப்பித்தல் ஆகியவை  ஏற்படும். பணிபுரியும் பெண்கள் தங்கள் பணி மற்றும் குடும்பச் சுமைகளை ஒருசேரச் சுமப்பதில் சிரமப்படுவார்கள்.

பரணி


இந்த வாரம் உங்களுக்கு இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும்.  எறும்பையொத்த, உங்கள் சுறுசுறுப்பு மிக்க செயல்பாடுகளைக் கண்டு அனைவரும் பாராட்டுவர்.  நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து, எதிர்பார்த்தபடி தனவரவு தாராளமாக இருக்கும். வியாபார விரிவாக்கம் பற்றிய தங்கள் கூட்டாளியின் ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவும், சிறப்பானதாகவும் இருக்கும். இருப்பினும் அவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

கார்த்திகை  1 ஆம் பாதம்

இந்த வாரம் அரசாங்கத்திடமிருந்து வெகு நாளாக எதிர்பார்த்திருந்த அனுகூலமான செய்திகள் மற்றும் தகவல்கள் தடங்கலின்றி வந்து சேரும். சினிமா, கேளிக்கை விடுதிகள் என ஆரவாரம் மிக்க சூழலில், மகிழ்ச்சி பொங்க, விருந்து உபசாரங்களில் கலந்துகொள்ளும் சூழ்நிலை உருவாகும். வீட்டில் திருமணம் போன்ற மகிழ்ச்சிகரமான சுபநிகழ்சிகள் நடைபெறும். விருந்தினர் வருகை ஆனந்தம் அளித்தாலும், செலவுகள் அதிகரிக்கும்.

ரிஷபம்

(கார்த்திகை – 2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள் )

கார்த்திகை 2,3,4 பாதங்கள்

இந்த வாரம் உங்களுக்கு சுமாரான வாரம். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெறக் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். தெரிந்தவர்கள், நண்பர்களில் மிகவும்  கஷ்டப்படுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் மகிழ்ச்சியடைவீர்கள். குடும்பத்தினரிடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்த்து, அனுசரித்துச் செல்வது நல்லது. பல நாட்களுக்கு முன் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த வேண்டிய நிர்பந்தம் எழும். பிரிந்த தம்பதிகள் இணைந்து பேரின்பம் அடைவர்.

ரோகிணி  

இந்த வாரம் மிகவும் அன்பு செலுத்தும் பெண்களின் ஆதரவால் லாபம் ஏற்படும். சொல்புத்தியும், சுயபுத்தியும் இல்லாத பிள்ளைகளின் போக்கு கவலை அளிக்கலாம். ஆயினும், தெய்வ அருளால் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்கள் ஏற்படும். தொடங்க நினைக்கும் எல்லாக் காரியங்களுமே, தடங்கலின்றி, தாமதமின்றி  வெற்றிகரமாக நடக்கும். நீண்ட நாட்களாக வராத, அரசு மூலமாக வரவேண்டிய பண நிலுவைகள் தடையின்றிக் கிடைக்கும். பெண்களால் ஆதாயம் ஏற்படும்.

மிருகசிரீஷம் – 1 , 2 பாதங்கள்  

இந்த வாரம் தெய்வபக்தி மேலீட்டால் பல திருப்பணிகள் செய்ய மனதில் நாட்டம் ஏற்படும். சுற்றமும் நட்பும் சூழ சொகுசான வாகனத்தில் சுற்றுலாப் பயணங்கள் செல்வதின் காரணமாக உள்ளம் மகிழும். சிலருக்குப் பேரின்பம் பெறும் விதமாக மனைவி கருவுற்றிருக்கும்  நல்லசேதி கேட்டு ஆகாயத்தில் மிதப்பது போல் ஆனந்தம் அதிகரிக்கும். மாபெரும் சபைகளில் மாலைகள் விழும் அளவுக்கு உங்கள் புகழ் ஓங்கும்..

மிதுனம்

(மிருகசிரீடம்- 3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3 பாதங்கள்)

மிருகசிரீஷம் – 3 , 4 பாதங்கள்

இந்த வாரம் உங்களுக்கு எப்போதும் பணம் பற்றிய சிந்தனையாகவே இருக்கும். தொழிலைப் பொருத்தவரை சிறு சிறு தடைகள் ஏற்படலாம். தெய்வ வழிபாடு மற்றும் தெய்வீகக் கருத்துக்களைக் கேட்டல் என இந்த வாரம் தெய்வீக வாரமாக அமையும். அதிக உழைப்பின் காரணமாக நேரத்துக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். எதிர்பார்த்த நபர்களிடம் இருந்து பண வருமானம் இருக்கும். உறவினர் வருகை மகிழ்ச்சி அளிக்கும். கேளிக்கைகளால் சந்தோஷம் அதிகரிக்கும்.

திருவாதிரை  


இந்த வாரம் உங்களுக்கு கலப்பான பலன்களாய் இருக்கும். தாய்வழி உறவுகளால் சங்கடங்களும், தொல்லைகளும் ஏற்படும். அரசு வகையில் வரி பாக்கிகளுக்காக, கட்டவேண்டிய பணத்தை உடனே கட்டவேண்டிய நிலை ஏற்படும். . அதற்குத் தேவையான பணவரவுகள், பணவுதவிகள் நண்பர்கள் மூலமாகக் கிடைத்துச் சிக்கல்கள் தீரும். பணிபுரியும் இடத்தில் உயர்திகாரிகளின் உத்தரவுகளை சிரமேற் கொண்டு, அவர்களின் ஆலோசனைப்படி நடந்தால், பதவி உயர்வுகள் கிடைக்கும்.

புனர்பூசம் – 1, 2, 3 – பாதங்கள்

இந்த வாரம் இந்த வாரம் உங்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை, புத்திர பாக்கியம் மற்றும் எதிர்பாராத பணவரவுகள் ஆகியவை ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் அரசு உதவியுடன் வெற்றி பெரும். வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு பணி உத்தரவு கிடைக்கலாம். போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டு. கற்பனை வளம் பெருகும். புத்தக வெளியீடு மற்றும் எழுத்துத் துறையினருக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். அரசுப் பணியில் இருப்பவர்கள் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம்.

கடகம்

(புனர்பூசம்- 4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்)

புனர்பூசம் – 4 ஆம் பாதம்.

இந்த வாரம் உங்கள் அழகும் பொலிவும் கூடும். பெயரும், புகழும் ஓங்கும். அறிவுத்திறனும் கூடும். சிலர் பணவிஷயங்களில் ஏமாறலாம். நல்லவர்களுடன் பழகுவது நல்லது. அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், பொறுப்பும் கிடைக்கும். உயர்வாகன வசதிகளும், நற்கல்வியும் கிடைக்கும். சிலருக்கு அவர்கள் ஆற்றிய சிறந்த சேவைக்காக அரசாங்க விருதுகள் கிடைக்கும்.  வாக்குவன்மை ஓங்கும்.  சிலருக்குப் புதிய வீடு, மனை ஆகியவை கிடைக்கும்.  பூரண சயன சுகம் ஏற்படும்.

பூசம்  

இந்த வாரம் உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்த நிக.ழ்ச்சிகள் நடைபெறும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். பணிபுரியும் பெண்கள் தற்போது உள்ள வேலையை விட்டு வேறு நல்ல வேலைக்கு முயற்சி செய்வர். பங்குச் சந்தை மூலமாகப் புதிய வருமானங்கள் கிடைக்கலாம். மற்றவர்கள் துயர் கண்டு அவர்களுக்கு உதவும் நல்ல எண்ணம் மேலோங்கும்.  சீரான பொருளாதார நிலை ஏற்படத் தொழிலில் கடினமாக உழைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

ஆயில்யம்  

இந்த வாரம் உங்களுக்கு பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும், சிலருக்கு நல்ல குரு வாய்க்கப் பெற்று ஆன்மிக வழியில் அறிவுத் தெளிவு ஏற்படும், பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும். சிலருக்கு திருமணம், சந்ததி விருத்தி ஏற்படலாம். மகான்களின் ஆசிகள் கிடைத்து வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரிகளை அனுசரித்துச் சென்றால் எதிர்பார்த்ததைவிட அவர்களின் ஆதரவு மிகுதியால் பதவி உயர்வுகளும் பெறலாம். புதிய தோழமையால் நன்மை ஏற்படும்.

சிம்மம்

(மகம்-1,2,3,4 பாதங்கள்,பூரம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திரம்- 1 பாதம்)

மகம்

இந்த வாரம் எதிர்பாராத தனவரவுகள் கைக்கு வந்து சேரும். பணம் வந்தால் செலவுகளும் வரும் தானே ? கேளிக்கை, பிறந்த நாள் விருந்துகள் எனச் செலவுகளோடு, மகிழ்ச்சி பொங்கும் வாரமாக அமையும். தொலைதூரச் செய்திகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பெருகும். சிலருக்குப் புதுப்புதுப் பதவிகளும் அதனால் வருவாய்ப் பெருக்கமும் ஏற்படும். புதிய வாகனயோகம் ஏற்படலாம். யாத்திரையும், வெளிநாட்டுப் பயணங்களும் ஏற்படும். பெண்களால் செலவுகள் அதிகரிக்கும்.

பூரம்

இந்த வாரம் உங்களுக்கு இனிப்பான செய்திகள் வரும். இல்லத்தில் சுபகாரியச் செலவுகளுக்குக் குறைவிருக்காது.   அதிக உழைப்புக்குப் பிறகே எடுத்த காரியங்கள் ஈடேறி, இலாபங்கள் பெருகும்.  பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டுத்  தான தருமங்கள் செய்வீர்கள். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கும் காரியங்களில் சிபாரிசு மூலமாக அனுகூலம் ஏற்படும். வாக்குவன்மை, வாகனயோகம் உண்டு.  தொழிலில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்படும். வழக்கு விவகாரங்களில் வெற்றி கிட்டும்.

உத்திரம்- 1 பாதம்


இந்த வாரம் சுபகாரியச் செலவுகள் ஏற்படும். வியாபார சம்பந்தமான பயணங்களால் ஆதாயம் அதிகரிக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். அரசுப் பணியாளர்களுக்கு அதிகாரம் மிக்க தலைமைப் பதவிகள் தேடிவரும். அரசியல்வாதிகளின்  சேவைகள் மக்களால் அங்கீகரிக்கப்படும். உங்கள் உயர்வைக் கண்டு பிறர் பொறாமை கொள்வர். சிலருக்கு உஷ்ண சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம். வியாபாரிகளுக்கு முதலீடுகள் கூடி  இலாபமும் அதிகரிக்கும்.

கன்னி

(உத்திரம் – 2, 3, 4-பாதங்கள், ஹஸ்தம்-1, 2, 3, 4 பாதங்கள், சித்திரை – 1,2 பாதங்கள்)

உத்திரம் – 2, 3, 4 – பாதங்கள்.

இந்த வாரம் மனைவி மூலம் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். புத்திர பாக்கியம் ஏற்படும். கௌரவப் பட்டங்கள் பதவிகள் கிடைக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கும். தெய்வப் பிரார்த்தனையால் பெண்களின் வேண்டுதல்கள் நிறைவேறும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். வாக்கால் வருமானம் பெருகும். பேச்சாளர்கள், வக்கீல்கள் ஆகியோருக்குத் தொழில் முன்னேற்றம் ஏற்படும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

ஹஸ்தம்

இந்த வாரம் உங்களுக்குப் பணவரவு அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். குடும்பத்தார் விரும்பிய பொருட்களை எல்லாம் வாங்குவீர்கள்..  சுகமும் ஆரோக்கியமும் பெருகும்.  கல்வியில் தேர்ச்சி, தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்கு உயர்ரக வாகனங்கள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும். தந்தைக்கு நன்மைகள் ஏற்படும். அரசு மரியாதை கிட்டும். உயர் பதவிகள் கிடைக்கும்.

சித்திரை – 1,2 பாதங்கள்  

இந்த வாரம் தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சுயமுன்னேற்றுத்துக்கான திட்டங்களை தீட்டி அதில் வெற்றி பெறுவீர்கள். சிலருக்கு உடன் பிறப்புக்களுடன் கருத்து வேறுபாடுகள் எழலாம். தண்ணீர்ப் பழங்கள், பூக்கள்            இரத்தினங்கள் ஆகிய பொருட்களின் வியாபாரம் ஆதயம் தரும். வாழ்வு சிறக்கும்  பிரபலமானவர்களின் ஆறுதலும், நட்பும் கிடைக்கும். உயர் பதவிகள் கிடைக்கும். பல புண்ணியத் தலங்களுக்கு மேற்கொள்ளும் பயணம் சிறப்பாய் அமையும்.

துலாம்


(சித்திரை-3,4 பாதங்கள், சுவாதி – 1,2,3,4 பாதங்கள் மற்றும் விசாகம்- 1,2,3 பாதங்கள்)

சித்திரை-3,4 பாதங்கள்  

இந்த வாரம் மகான்களின் ஆசியும், புதிய தொடர்புகளால் நன்மைகளும் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். பல புண்ணியத் தலங்களுக்குப் பயணம் செய்யும் வாய்ப்புக் கிட்டும். பழைய கடன்களை அடைக்கப் புதிய கடன்கள் வாங்க நேரலாம். பணிபுரியும் இடத்தில் இடைவிடாத பணி காரணமாக நேரத்துக்கு உணவு உண்ண இயலாமல் போகும். அரசு உதவியுடன்  தொழில் தொடங்கும் காலம் கனிந்து வரும். அரசு அதிகாரிகளின் ஆதரவால் நினைத்த காரியங்கள் எளிதில் முடிவடையும்.

சுவாதி  

இந்த வாரம் எதிர்பாராத தனவரவு ஏற்படும். நல்ஆரோக்கியமும், புதுத் தெம்பும், ஏற்படும்.  பணக்கார மனைவியும் அமைவாள். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும். கௌரவம், பட்டம், பதவி ஆகியவை தேடிவரும். வியாபாரம் செய்பவர்களுக்கு பொருளாதார நிலை சீராக இருக்கும். புதிய தொழிற்சாலை விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெற்றி அடைவார்கள். நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும்.

விசாகம்- 1,2,3 பாதங்கள்

இந்த வாரம் பூமி, வீடு மூலம் இலாபம் ஏற்படும். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நிறைவேறி மகிழ்வு தரும். வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். பெண்களால் இலாபம் ஏற்படும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் சிறப்பாக  நடைபெறும்.  புதிய திட்டங்களால் தொழிலில் இலாபம் அதிகரிக்கும். தொலை தூரப் பயணங்களால் நன்மை ஏற்படும். சிலருக்கு வெற்றிகரமான தொழில் முன்னேற்றங்கள் ஏற்படும். கடும் பிரயாசைகளுக்குப் பிறகே எண்ணிய எண்ணங்கள் நிறைவேறும்.

விருச்சிகம்

(விசாகம்- 4, அனுஷம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் கேட்டை -1,2,3,4 பாதங்கள் )

விசாகம்- 4 ஆம் பாதம்

இந்த வாரம் பக்திச் சொற்பொழிவுகள், பாடல்கள் கேட்பதில் ஆர்வம் எழும். எதிர்பாராத தனவரவு, புத்திர பாக்கியம், சுபகாரிய நிகழ்ச்சிகள் ஆகியவற்றால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்களால் வருமானம் அதிகரிப்பதால் உள்ளம் மகிழும். தொழிலில் ஏற்படும் விரிவாக்கங்கள் காரணமாகத்  தொழிலில் அசாத்திய வளர்ச்சி ஏற்படும். மேலதிகாரிகளின் உதவி மற்றும் அனுகூலத்தால் உயர்பதவிக்கான சிபாரிசுகள் மேற்கொள்ளப்படும்.

அனுஷம்

இந்த வாரம் எல்லா வசதிகளும் இன்பமும் ஏற்படும். பலவகை யோகமும், சந்ததி விருத்தியும் ஏற்படும். பணிபுரியும் பெண்களுக்குத் தங்கள் விருப்பப்படி நல்ல கணவன் அமைந்து திருமணம் நடக்கும்.  நல்ல பண்பாளர்களின் நட்பும், அன்பும் கிடைக்கும். சிலருக்கு சகோதரர்களின் ஆதரவால் பொருளாதாரத்தில் திருப்திகரமான நிலை ஏற்படும். சுயதொழில் புரிவோருக்கு அரசின் உதவிகள் தடையின்றிக் கிடைக்கும். நினைத்ததை நினைத்தபடியே சாதிக்கும் திறன் அதிகரிக்கும்.

கேட்டை

இந்த வாரம் செல்வத்துக்கு அதிபதியான அலைமகள் உங்களைப் பார்த்துச் சிரித்தால் நீங்கள் மகிழமாட்டீர்களா ? தனவருவாய் திருப்திகரமாக இருக்கும். நல்ஆரோக்கியமும், புதுத் தெம்பும் ஏற்படும். பணக்கார மனைவியும் அமைவாள். அழகான, எழில் நிறைந்த வீடும் கிடைக்கும். கேளிக்கை விருந்துகள் மற்றும் பெண்களின் அருகாமை ஆனந்தமளிக்கும். வாகனங்களில் செல்லும் போது வேகத்தைக் குறைத்து, எச்சரிக்கையுடன் இருந்தால் விபத்தினைத் தவிர்க்கலாம்.

தனுசு

(மூலம்-1,2,3,4 பாதங்கள், பூராடம்- 1,2,3,4 பாதங்கள் மற்றும் உத்திராடம் –1 பாதம்)

மூலம்  

இந்த வாரம் தனவரவு, கூட்டாளிகள் ஒத்துழைப்பு, எதிர்பாலரால் சந்தோஷம், புகழ், கௌரவம், திருமணம் மற்றும் பெரியவர்கள் ஆசி ஆகியவை ஏற்படும். பெண்கள் தங்கள் சேமிப்பை வைத்து புதிய ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள். தந்தை மகனிடையே இருந்து வந்த மனக்கசப்புக்கள் தீரும். அரசு மூலம் வெகுமதிகள் கிடைக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரித்து இலாபமும் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்தபடி பதவி உயர்வு கிடைக்கும்.

பூராடம்

இந்த வாரம் திருமண வயது வந்து, திருமணமாகாத பெண்களுக்குத் திருமணத்துக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அவசியமற்ற, அலைச்சல் தரும் பயணங்கள் மேற்கொள்ள நேரும். அரசு ஊழியர்களுக்கு கட்டளைகளை இடும், அதிகாரம் மிக்க உயர் பதவிகள் கிடைக்கும். சிலருக்கு தெய்வ சங்கல்பத்தால் புத்திர பாக்கியம் ஏற்படும் வழி பிறக்கும். நீங்கள் பங்குச்சந்தை மற்றும் போட்டி பந்தயங்களில் ஈடுபடாதிருப்பது நல்லது. அதன் காரணமாக இழப்பைத் தவிர்க்கலாம்.     

உத்திராடம் –1 ஆம் பாதம்

இந்த வாரம் உங்களுக்குப் புண்ணியத் தல யாத்திரைகள் ஏற்படும்.  திருப்திகரமான பொருளாதார உயர்வினால் எப்போதும் மனதில் மகிழ்ச்சி பொங்கும். குடும்பத்தாருக்கும் அவர்கள் ஆசைகள் நிறைவேறுவதால் குதுகலமாய் இருப்பர். அனுபவ பூர்வமான அறிவுத்திறன் கூடும், பூமி வீடு மூலம் இலாபம் ஏற்படும். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம்.  இளைஞர்களுக்குக் காதல் விவகாரங்கள் சாதகமாக அமையும். குடும்பத்தில் மனைவியின் பணிவிடை மகிழ்ச்சி தரும். மதிப்பு, கௌரவம் உயரும்.

மகரம்

(உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )

உத்திராடம்- 2,3,4- பாதங்கள்

இந்த வாரம் உங்கள் சம்பாதிக்கும் திறன் மேம்படும். வாழ்க்கையில் நேர்மையும், கடின உழைப்பும் மட்டுமே நல்ல ஊதியம் அளிக்கும். ஆயினும், வாழ்க்கையில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் வெற்றியின் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சிகரமான கொண்டாட்டங்கள் நடக்கும். உங்கள் சிறந்த பணிக்காக மேலதிகாரிகளால் மெச்சப் படுவீர்கள். வீட்டில் செலவுகள் அதிகமாவதின் காரணமாகப் பணமுடை ஏற்பட வாய்ப்பு உண்டு.

திருவோணம்

இந்த வாரம் பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் நிலவும். பக்தி மார்க்கத்தில்  ஈடுபாடு அதிகரிக்கும். சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். புதிய சௌகரியங்கள் சேரும். குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால்  இலாபம் கிடைக்கும். சிலருக்குக் காரியத் தடைகளும், வழக்கு வியாஜ்ஜியங்களும் ஏற்படலாம். மனைவியின் பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய நிலை ஏற்படும்.

அவிட்டம் 1,2 பாதங்கள்

இந்த வாரம் பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் நிலவும். பக்தி மார்க்கத்தில்  ஈடுபாடு அதிகரிக்கும். சுபகாரிய நிகழ்வுகளால் இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கும். புதிய சௌகரியங்கள் சேரும். குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். வெளிநாட்டு வாணிபத்தால்  இலாபம் கிடைக்கும்.  நிறைவேறாது எனத் தெரிந்தும், வீண் ஆசைகளை மனதில் வளர்த்துக் கொள்ளாது, விலக்கி வைப்பது நல்லது. விவசாயிகளுக்கு வளம் கொளிக்கும் வயல்களால் வசதிகள் பெருகும்.

கும்பம்

(அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)

அவிட்டம் – 3,4 பாதங்கள்


இந்த வாரம் பல திசைகளில் இருந்தும் தனவரவு அதிகமாக இருக்கும். தங்கள் வாக்கு வன்மை மற்றும் சிறந்த பொதுஜனத் தொடர்பு காரணமாக உபரி வருமானம் கிடைக்கும். சிலருக்குப் பேச்சே தொழில் மூலதனமாகும். வேளாண் பொருட்கள் உற்பத்தி விவசாயிகளுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் வீணான வாக்குவாதத்தில் ஈடுபடாதிருப்பது நல்லது. அதுபோல் உங்கள் எதிரிகளிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது.

சதயம்

இந்த வாரம் கடினமான வேலைகளையும் தன்னம்பிக்கை காரணமாக சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். அரசு வேலைக்கு மனுச் செய்தவர்களுக்கு அனுகூலமான செய்தி வரும். தம்பதிகளிடையே இருந்து வந்த மோதல்கள் குறைந்து, அன்னியோன்யம் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆசியால் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். குடும்பத்தில் உயர்வான முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.

பூரட்டாதி-1,2,3 பாதங்கள்


இந்த வாரம் பண விஷயத்தைப் பொருத்தவரை திருப்திகரமான வாரமாக இருக்கும். புதிய பெண்கள் தொடர்பு ஏற்படும். பல வகையான உயர்ந்த வாகன வசதி அமையும். சிலருக்குப் பெரிய இடத்துப் பெண் மனைவியாக அமைவாள். மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும்.  நெடுநாளாக வராத, வரவேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும். உறவுகள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் மூலமான உபகாரங்கள் தடைப்படாது. எடுத்த முயற்சிகள்யாவும் வெற்றி பெற அதிக உழைப்பு தேவைப்படும்.

மீனம்

(பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)

பூரட்டாதி – 4 ஆம் பாதம்  

இந்த வாரம் பூமி அல்லது வாகனம் வாங்கும் யோகம் குறிகாட்டப்படுகிறது. குடும்ப சந்தோஷம் குறைவில்லாது நிறைந்திருக்கும். வீட்டிற்குத் தேவையான நவீன உபகரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் நல்ல ஆதாயம் பெற, புதிய திட்டங்களில் பணத்தை முதலீடு செய்வீர்கள்.  பழைய நண்பர் ஒருவரின் வரவு அந்தநாள் ஞாபகங்களை நினைவுறுத்தி மகிழ்விக்கும். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் இலாபம் தரும். வங்கிக் கணக்கில் ரொக்க இருப்புக் கூடும்.

உத்திரட்டாதி

இந்த வாரம் தனவிருத்தி உண்டாகும். வாகனங்களும், சொத்துக்களும் வந்து சேரும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். புத்திர பாக்கியம் ஏற்படும். அனைத்து வசதிகளுடன் கூடிய அழகிய இல்லம் அமையும். புதிய பதவிகள் தேடிவரும். அந்தஸ்து உயரும். அரசுப்பணி புரிபவர்களுக்கு அனுகூலம் உண்டு. பெண்கள் தங்களுக்கு விருப்பமான இடத்திற்கு மாற்றம் பெற முயற்சிப்பர். அதில் வெற்றியும் பெறுவர்.  விவசாயிகளுக்கு எதிர்பார்ப்பைவிட அதிக ஆதாயம் கிட்டும்.

ரேவதி

இந்த வாரம் தாங்கள் எதிர்பார்த்தபடி தாராளமான தனவரவு இருக்கும்.  வேதம் அறிதல், பக்திச் சொற்பொழிவு கேட்பதில் ஆர்வம் ஏற்படும். நண்பர்களுடன் மிகுந்த உற்சாகத்துடன் உலா வருவீர்கள். மனதிற்குப் பிடித்த புத்தாடைகள், வாய்க்கு ருசியான உணவுவகைகள்  ஆகியவற்றை அடைந்து மகிழ்வீர்கள். புத்திர பாக்கியம். புத்திரரால் உதவி ஆகியவை ஏற்படும். கோபத்தை அடக்கினால் குடும்பத்தில் குழப்பங்கள் தீரும். வீட்டுச் செலவுக்காகப் புதிய கடன்களை வாங்க வேண்டிய சூழ்நிலை எழும்.

by Swathi   on 19 Sep 2016  0 Comments
Tags: Natchathira Palangal   27 Natchathira Palangal   Tamil Natchathira Palangal   நட்சத்திர பலன்கள்   Rasi Palangal   Vara Rasi Palangal   Madurai Abirami Sekar  
 தொடர்புடையவை-Related Articles
இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (24 – 06 – 2018 முதல் 30 - 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (03 - 06 - 2018 முதல் 09 - 06 - 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06  – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (27 – 05 – 2018 முதல் 02 – 06 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (13 – 05 – 2018 முதல் 19 - 05 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (06 – 05 – 2018 முதல் 12 - 05 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (15 - 04 – 2018 முதல் 21 – 04 – 2018 வரை)
இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை) இந்த வார நட்சத்திர பலன்கள் (08 – 04 – 2018 முதல் 14 - 04 – 2018 வரை)
நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை) நட்சத்திர வார பலன்கள் (01 – 04 – 2018 முதல் 07 - 04 – 2018 வரை)
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.